tamilnadu

img

சுசில் காஜல், லக்கிம்பூர் விவசாயிகளின் மரணமானது மோடி அரசின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணிகள்

திண்டுக்கல், நவ.27- சுசில் காஜல், லக்கீம்பூர் கெரி விவசாயி களின் மரணமானது ஒன்றிய  பாஜக அர சின் சவப் பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணிகள் என்று திண்டுக்கல்லில் நடை பெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் ஒருங்கிணைப்பாளரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச்செயலா ளருமான விஜூ கிருஷ்ணன் கூறினார்.  தில்லி விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி  சனிக்கிழமை யன்று  திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 500க்கும் மேற் பட்ட விவசாய சங்கங்கள் சார்பில் போராட் டம் ஆரம்பித்த போது மோடி அரசாங்கத் திற்கு புரியவில்லை. 

ஒரு வருடமாக நடைபெற்ற இந்த போ ராட்டத்தில் மிகக் கடுமையான வெயில், குளிர், மழை காரணமாக 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்த னர். இந்த போராட்டத்தின் தியாகிகளானார் கள். அவர்களது மரணத்திற்குக் காரணம் இந்த மோடி அரசாங்கமும், பாரதிய ஜனதா கட்சியும் தான். தில்லி சலோ என்ற முழக்கத்தை ஏற்று லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசா யத் தொழிலாளர்களும் பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து புறப்பட்டு தில்லியை முற்றுகையிட்டனர்.  மோடி அரசு இந்த போராட்டத்தை ஒடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்க ளை தோண்டியது. ஷிப்பிங் கண்டெய்னர்க ளைக் கொண்டு வந்து தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். லத்தியால் அடித்தார்கள். ஆனாலும் ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறைகளை முறியடித்து ஓராண்டாக விவசாயிகள் போராட்டத்தில் உறுதி காட்டினர். தில்லி நகரைச் சுற்றியுள்ள சிங்கூ, திக்ரி, பல்வல், காசிப்பூர், ஷாஜகான்பூர், மேவாத் என 6 எல்லைகளிலும் இந்த போராட்டம் நடை பெற்றது.

தமிழ்நாட்டின் விவசாயிகளும் விவசா யத் தொழிலாளர்களும், பல்வேறு தொழி லாளர்களும் இந்த போராட்டத்தில் பங் கேற்றனர். அதனால் இந்த வெற்றியில் உங்களுக்கும் பங்கிருக்கு என்பதை பெரு மையாக சொல்லிக் கொள்ளலாம். கடந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் மிகப்பெருமளவில் பங்கேற்றன. தில்லியைச் சுற்றி 5 லட்சத் திற்கும் அதிகமான டிராக்டர்களில் விவசா யிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். 

அந்த அளவிற்கு சுதந்திர இந்திய வர லாற்றில் அப்படி ஒரு குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்க முடியாது. அந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகை யில் சங் பரிவாரமும், பாஜகவும், குழப்பம் விளைவிக்க பார்த்தன. போராட்டத்திற்கு எதிராக பாஜக அரசு காங்கிரீட் சுவர் கட்டியது. மின்சாரத்தையும், குடிநீரையும், வலைத் தளத்தையும் துண்டித்து போராட் டத்திற்கு இடையூறு செய்து போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தது. லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத் தின் போது காரை ஏற்றி 4 விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரையும் கொலை செய்த அரசு பாஜக அரசு. ஹரியானாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடை பெற்ற தடியடியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த சுசில்காஜல் கொலை செய்யப்பட்டார்.  ஆனால் போராட்டம் தொடர்ந்தது. சுசில்காஜலுடைய குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ.25 லட்சம் தர வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள 2 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று போராடினர். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அந்த போராட்டம் வெற்றி பெற்றது. பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சியின் போது  ‘சைமன் கமிசனே’ திரும்பிப் போ என்று போ ராடிய லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்தி கொல்லப்பட்டார். அதுபோன்ற சம்ப வம் சுசில்காஜல் மீது நடைபெற்ற தடியா கும். சுசில்காஜல் இறப்பதற்கு முன்பு என்னு டைய மரணம் பாஜக அரசின் சவப் பெட்டி க்கு அடிக்கப்படும் கடைசி ஆணி என்றார்.  லக்கிம்பூர் விவசாயிகள் மரணமும், சுசில்காஜல் மரணமும் ஒன்றிய  பாஜக  அர சின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணிகள் என்பதில் சந்தேகமில்லை.  இவ்வாறு விஜூ கிருஷ்ணன் பேசி னார்.

;