tamilnadu

img

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் தேர்வு!

அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுகநாயகன் வேள்பாரி நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்துலக சிறந்த படைப்புக்கான விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு எழுத்தாளரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக வேள்பாரி” நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் விருது விழா நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே விருது தொகை 7 லட்சம் ரூபாயை ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரயுகநாயகன் வேள்பாரி நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக இந்த நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

;