tamilnadu

img

21 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஎம்-விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் விடுதலை

கிருஷ்ணகிரி,ஜூலை.31- 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண கிரி மாவட்டம் வசந்த பள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும் இணைந்து நடத்திய நில மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற வர்கள் மீது ரசால் போடப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 விடு தலை செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப் பள்ளி பகுதியில் உள்ள வசந்த பள்ளி  கிராமத்தில் அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனிவெங்கடப்பன் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தார். அந்த  நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு தலித் மக்களுக்கு வழங்கக் கோரி 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தது. இந்நிலையில், 2001 வசந்த பள்ளி யில் அதிமுக எம்எல்ஏ ஆக்கிரமித்து வைத்திருந்த 100 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்க 2005 ஆம் ஆண்டு ஜூலை   18ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும்,  மார்க்சிஸ்ட் கட்சியும் போரா ட்டத்தை அறிவித்தது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் அன்றைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலை மையில் பிரமாண்ட போராட்டம் நடை பெற்றது.  அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த டி.ரவீந்திரன், வாலிபர் சங்க செயலாளராக இருந்த ஜி.கே.நஞ் சுண்டன் உள்ளிட்ட 32 தோழர்கள் மீது  பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிமுக அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் 21 ஆண்டுகளாக நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 32 தோழர்க ளில் 12 மரணமடைந்தனர். இந்த வழக்கில் ஜூலை 31 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. எனவே, அன்றைக்கு குற்றம் சாட்டப்பட்டவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய மாவட்ட செயலாளருமான நஞ்சுண்டன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் இருதயராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், வாலிபர் சங்க நிர்வாகி நவீன உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  நீதிபதி ஸ்ரீவத்சவா தனது தீர்ப்பில், “நில மீட்புக்காக போராடிய உங்கள் மீது அரசு தரப்பில் போடப்பட்ட வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. எனவே, போராட்டம் நடத்தியவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று அனை வரையும் விடுதலை செய்கிறேன்” என்றார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு  ஆதரவாக வழக்கறிஞர் மார்க்ஸ் வாதாடினார்.