tamilnadu

img

மாணவி நந்தினிக்கு தங்கப் பேனா: வைரமுத்து நேரில் பரிசளிக்கிறார்

சென்னை, மே 9- 12 ஆம் வகுப்பு அரசு  பொதுத் தேர்வில் அரசு  உதவி பெறும் பள்ளியான,  திண்டுக்கல் அண்ணா மலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.  இவரது தந்தை சரவணக் குமார் ஒரு தச்சுத்தொழி லாளியாவார். இந்த நிலையில், 600-க்கு  600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத் துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். தனது டுவிட்டர் பதிவில், “ஒரு தச்சுத் தொழிலாளி யின் மகள் மாநிலத்  தேர்வில் உச்சம் தொட்டி ருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை  நந்தினிக்குப் பரிசளிக் கிறேன். திண்டுக்கல் வரு கிறேன்; நேரில் தருகிறேன்.  உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே!” என்று தெரிவித்திருக்கிறார்.