tamilnadu

img

கடையாலுமூட்டில் வாச்சாத்தி வெற்றி விழா

அருமனை, டிச.2 - கன்னியாகுமரி மாவட்டம் கடை யாலுமூட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாச்சாத்தி போராட்ட வெற்றி விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு  குமரி மாவட்டத் தலை வர் எஸ். ஆர்.சேகர் தலைமை தாங்கி னார். மாநில நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு சிறப்புரையாற்றினார். மூத்த தலைவர் என்.முருகேசன், விவ சாயிகள் சங்க கேரள மாநில நிர்வாகி சசிதரன், ஆர்.ரெவி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் களியல் வட்டா ரச் செயலாளர் சசிகுமார், டி.வின் சென்ட், கடையாலுமூடு பேரூராட்சித் தலைவர் ஜூலியட், சின்னத்தம்பி, சைமன்சைலஸ் உட்பட பலர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.