லக்னோ, டிச.31- உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்தியதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரி வித்தார். 2022-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத் தியிருக்கிறது. வியாழனன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களைச் சந்தித்து, அனைத்து கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். 2017-ஆம்ஆண்டு உத்தரப்பிரதேச. சட்டமன்றத் தேர்தலில் 61சதவீத வாக்குகள் பதிவாகின. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலத்தில் ஏன் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம். ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவி பாட்கள் பொருத்தப்படும். தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் ஒரு லட்சம் வாக்குச் சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் உள்பட வாக்குச் சாவடிக்கு வர முடியாதவர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் அவர்களின் வீட்டிற்கே சென்று வாக்க ளிக்கும் வசதியை செய்துதரும். சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.’’ இவ்வாறு சுஷில் சந்திரா கூறினார். தேர்ல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி களின்தலைவர்கள், தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும், பாஜக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். வாக்குப்பதிவின் போது மத்திய துணை ராணுவப் படை களை போதுமான அளவில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.