tamilnadu

img

இலவச வீட்டுமனை, இலவச வீடுகள் வழங்குவதில் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும்

நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 ஆவது மாவட்ட மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில  துணை தலைவருமான ஆர்.கிருஷ்ணன் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மு.அசோக்கின் குடும்ப நிதியாக ரூ.10 ஆயிரத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜிடம் வழங்கினார்.

 திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லை மாவட்டத்தில் தலித் மக்க ளுக்கு இலவச வீட்டுமனை, இலவச வீடுகள் வழங்குவதில் முறைகேடுக ளை தவிர்த்து தகுதியானவர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  தீர்மா னங்கள் நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நெல்லையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் க.ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாநில குழு  உறுப்பினர் பூ.கோபாலன் முன்னிலை வகித்தார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் ஆர்.மதுபால் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் டாக்டர் எஸ்.ராமகுரு வர வேற்றுப் பேசினார். மாநாட்டை சங்க மாநில துணை செயலாளர் எம்.கந்த சாமி  துவக்கி வைத்தார். சி.பி.எம். மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கிருஷ்ணன், நவஜீவன் டிரஸ்ட் இயக்குனர் நளன், மனித உரிமை கள்  பரதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கதிரவன், எஸ்.சி- எஸ்.டி மாநில ஒருங்கிணைப்பா ளர் ஜார்ஜ்  ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக மாநாட்டில் சாதி வெறியர்க ளால் படுகொலை செய்யப்பட்ட வாலி பர் சங்க மாவட்ட பொருளாளர் மு.அசோக் கின் உருவபடம் திறக்கப்பட்டது.

மாநாட்டில்  மாவட்ட தலைவராக ஆர்.மதுபால்,செயலாளராக க.ஸ்ரீராம், பொருளாளராக இ.பாலு மற்றும் 6 துணை தலைவர்கள், 6 துணை செயலாளர்கள் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில்  தலித் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு அரசாணை எண் 92யை முறையாக கறாராக அமல்படுத்த வேண்டும். அந்தந்த ஆண்டுக்கான கல்வி உதவி தொகையை அந்த கல்வி யாண்டு முடிவதற்குள் வழங்க வேண்டும். பட்டியல் இனம் பழங்குடி இனத்த வர்கள் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 ஐ அமல்படுத்த வேண்டும், நெல்லை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு  இலவச வீட்டுமனை, இலவச வீடுகள் வழங்குவதில் முறை கேடுகளை தவிர்த்து தகுதியானவர்க ளுக்கு வழங்கிட வேண்டும். மத்திய மாநில அரசுகளில் உள்ள காலி பின்ன டைவு பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார்துறை நிறுவ னங்களிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கையால் மலம் அள்ளும் கொடுமையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அரசு மாணவர்கள் விடுதிகளை முறைப்படுத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினார். வரவேற்புக் குழு செயலாளர் எம்.சுடலைராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் சிறுபான்மை நல குழு மாவட்ட தலைவர் வீ.பழனி, ஆர். எஸ்.துரைராஜ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பி.உச்சி மாகாளி  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.