tamilnadu

img

ஒன்றிய அரசு அலுவலகங்களை மாணவர் சங்கத்தினர் முற்றுகை!

கல்விக்கான நிதியை மறுத்து ஒன்றிய அமைச்சர் ஆணவப் பேச்சு

தமிழக மாணவர்களின் கல்விக் கான நிதியை வழங்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) தமிழகம் முழுவதும் திங்களன்று ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனையும் இந்திய மாண வர் சங்கத்தினர் முற்றுகையிட்டுக் கைதாகினர்.

துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு பல்கலைக்கழக மானி யக் குழு (UGC) வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்; சமக்ர சிக்ஷ அபி யான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயி ரத்து 152 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும், மும்மொழிக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ கத்திற்கு ஒரு பைசாவைக் கூட  வழங்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சை கண்டித்தும், இந்திய மாண வர் சங்கத்தினர், மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். சென்னை சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி கண்டன உரை யாற்றினார்.

சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஆனந்தகுமார், ரா. பாரதி (தென் சென்னை), தமிழ் (மத்திய சென்னை), அகல்யா (வட சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் உருவப்படத்தை கிழி த்து முழக்கமிட்டபடி மாணவர்கள் சாஸ்திரி பவனை நோக்கிச் செல்ல முற்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இத னால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட் டது. அதனைத்தொடர்ந்து மாண வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல திருப்பூரில் இந்திய  மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் தௌ.

சம்சீர் அகமது தலைமை யில், தலைமை அஞ்சல் நிலை யத்தை முற்றுகையிட்டுப் போரா ட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டத் தலைவர் கல்கிராஜ், செயலாளர் பிரவீன் குமார், நிர்வாகிகள் மணிகண்டன், சுஜிதா, ஜோதிபாசு, விமல்ராஜ், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மோடி அரசுக்கு எதிராகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் மத்தியக்குழு உறுப்பினர் ச. மிருதுளா, மதுரையில் மாநிலத் துணைச்செயலாளர் ப. ஆனந்த், கும்பகோணத்தில் மாநி லத் துணைத்தலைவர் மோகன், திரு நெல்வேலியில் துணைத் தலைவர் கே.சரவணன், சேலத்தில் செயற்குழு உறுப்பினர் பவித்ரன் ஆகியோர் தலைமையில் போரா ட்டம் நடைபெற்றது. இந்தப் போரா ட்டங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை சிதைக்க மோடி அரசு சதி! ரூ.12 ஆயிரம் கோடியைத் தராமல் அடாவடி

முற்றுகைப் போராட்டத்தின் போது, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி பேசுகையில், “மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையிலும் யுஜிசியின் வரைவு அறிக்கை உள்ளது. கல்வியாளர்களே, துணைவேந்தர்களாக நியமிக்கப் பட்டு வருவதற்கு மாறாக, கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளை துணைவேந்தர் களாக நியமிக்க யுஜிசி விதிமுறை வழிவகை செய்கிறது” என்று தெரிவித்தார். “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநிலத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் தேடுதல் குழுவை நியமிப்பார், தேர்வு செய்யப்பட்டவர்களை இறுதி செய்வார் என்று புதிய வரைவு அறிக்கை கூறுகிறது. கல்வியைக் காவிமயமாக்க, கார்ப்பரேட் மயமாக்க ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தின் கல்வித் தரத்தைக் குறைக்கவும், உயர்கல்விக்குச் செல்வதை தடுக்கும் வகையிலும் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றிய அரசு தராமல் உள்ளது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால்தான் நிதியை தருவோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அடாவடி செய்கின்றார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பேசுகிறார்” என்றும் அரவிந்தசாமி குற்றம் சாட்டினார்.