மதுரை, மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் முயற்சியில் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மே 18 அன்று நடைபெறுகிறது.இதில் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் வருகின்ற மே 18ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., மே 16 செவ்வாயன்று மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகர ணங்கள் மற்றும் உதவிகள் வழங்கும் ஒன்றிய அரசின் “ஏடிஐபி” சமூக நீதி - அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக முகாம் நடத்த வேண்டும்
என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 14 நாட்களில் 15 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 17,749 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றார்கள். இது தமிழ்நாட்டிலேயே அதிக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற முகாமாக நடைபெற்றது. முகாம்களில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பேருந்து பயண அட்டை, ரயில்வே பயண அட்டை மற்றும் கல்விக் கடன், சிறு-குறு தொழில் துவங்கு வதற்கான ஏற்பாடு, பட்டா வழங்குதல் போன்ற அரசின் நலத்திட்டங்கள் சுமார் 80 முதல் 90 சதவீதம் பேருக்கு வழங்கப் பட்டது. அதேபோல் அந்த முகாம்களில் ஒன்றிய அரசின் ஏடிஐபி துறையின் கீழ் இயங்கும் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திற னாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, தேவைப்படும் உப கரணங்களை தயாரிப்பதற்கான பணிகள் கடந்த ஆறு மாதங்கள் நடைபெற்றது. இதில் 2377 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மே 18 வியாழனன்று வழங்குவதற்கான நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறஉள்ளது.
அதனைத்தொடர்ந்து மேலூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், திரு மங்கலம் ஆகிய ஐந்து மையங்களிலும் நடத்த இருக்கின்றோம். இந்த முகா மிற்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. ஒன்று, தமிழ்நாட்டிலேயே அதிக மாற்றுத்திற னாளிகள் பங்கேற்ற முகாமாகவும் 2377 பேருக்கு சுமார் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் முகாமாகவும் உள்ளது. இது தமிழ்நாட்டில் முதல் முறையாக 2 கோடி ரூபாய்க்கு மேல் உபகரணங்கள் வழங்கும் முதல் முகாமாக உள்ளது. இந்த முகாமில் ஒன்றிய அரசின் சமூக நீதி -அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி. டி. ஆர். பழனிவேல் தியாக ராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள் . இதில் சுமார் 1300 மாற்றத்திறனாளிகளும் மற்ற ஐந்து இடங்களில் நடைபெறும் முகாம்களில் 1300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும் பங்கெடுக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவிலேயே அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஒரு முகாமாக அமைந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது அலிம்கோ நிறுவனத்தின் பெங்களூரு நிர்வாக முதன்மை மேலாளர் அசோக் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகிய உடனிருந்தனர்.