தமிழ்நாடு மற்றும் புது வையில் உள்ள 40 மக்களவைத் தொகுதி களுக்கும் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாசிச மற்றும் அடிமை அதி முக கூட்டணியை வீழ்த்து வதற்கு ‘இந்தியா’ கூட்டணி பிரச்சார த்தை தீவிரப்படுத்தி உள்ளது. கூட்டணிக்குத் தலைமை ஏற்று இருக்கும் திமுக தலைவரும் முத லமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை மார்ச் 22 அன்று திருச்சியில் இருந்து தொடங்கி னார். ஏப்ரல் 17 வரை அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதேபோல், திமுக இளைஞரணி செயலாளரும், மாநில இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் சனிக்கிழ மை மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மாலை 6 மணிக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் பகுதியிலும் காங்கிரசின் ‘கை’ சின்னத்திற்கு ஆத ரவு திரட்டினார். இரவு 8.30 மணிக்கு தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியிலும், இரவு 9.15 மணிக்கு ஆண்டிபட்டி பகுதியிலும் திமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வடக்கு பகு தியில் தனது பிரச்சாரத்தை துவக்கும் உதயநிதி ஸ்டாலின், காலை 11 மணிக்கு பெரிய குளம் பகுதியில் வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். மாலையில், திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்தை ஆதரித்து மாலை 5 மணிக்கு திண்டுக்கல் கிழக்கு பகுதி யிலும், மாலை 6:15 மணிக்கு நத்தம் பகுதிகளிலும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கோரி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, இரவு 7 மணிக்கு மதுரை வடக்கு பகுதியிலும், இரவு 7.45 மணிக்கு மதுரை மாநகரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகிறார். மார்ச் 25 அன்று செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, திரு வண்ணாமலையிலும் 26 அன்று திரு வண்ணாமலையில் தொடங்கி வேலூர் மாவட்டத்தில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். மார்ச் 27 அன்று காலை 10 மணிக்கு அரக்கோணம் தொகுதியில் மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் உதய நிதி ஸ்டாலின் மாலை 7.30 மணிக்கு திருபெரும்புதூரில் பிரச்சாரம் செய்கிறார்.