தில்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி-20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்லுலா வென்டர் லியன், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.