tamilnadu

img

டிஆர்இயு பொன்மலை ஒர்க்ஷாப் சங்க அலுவலகம் திறப்பு

டிஆர்இயு பொன்மலை ஒர்க்ஷாப்  சங்க அலுவலகம் திறப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4 - டிஆர்இயு பொன்மலை ஒர்க்ஷாப் டிவிஷன் சங்க அலுவலக திறப்பு விழா புத னன்று, திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகே நடந்தது. விழாவிற்கு ஒர்க் ஷாப்  கோட்ட தலைவர் லெனின் தலைமை வகித்தார். டிஆர்இயு சங்க நுழைவு வாயிலை ஒர்க்  ஷாப் கோட்ட தலைவர் லெனின், உதவி பொதுச் செயலாளர் சந்தான செல்வம் ஆகி யோர் திறந்து வைத்தனர். டிஆர்இயு கொடியை சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் ஏற்றினார். டிஆர்இயு  சங்க கட்டிட அலுவலகத்தை சங்க பொதுச் செயலாளர் ஹரிலால் திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார். கோட்ட துணைத் தலைவர்கள் ராஜ சேகர், சங்கர், உச்சிமாகாளி, பதுருதீன், தொமுச வரதராஜன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், இதயத் துல்லா, திருச்சி டிவிசன் டிஆர்இயு கோட்டச் செயலாளர் கரிகாலன், டிஆர்பியு  நிர்வாகிகள் மனோகரன், மகேந்திரன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வம், சங்க உதவி பொதுச் செயலாளர் சாம்பசிவம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோட்ட உதவி தலைவர் சங்கர் நன்றி கூறினார்.