பெரியகுளம், அக்.29- கும்பக்கரை அருவியில் 8 நாட்க ளுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் ஞாயிறு முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனு மதிக்கப்பட்டனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதி பாம்பாற்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதிகளில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அக்.20 இல் அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், சனிக்கிழமை அருவி யில் நீர் வரத்து சீராகத் துவங்கியது. இதனால் 8 நாட்களுக்கு பிறகு ஞாயிறு முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்த னர். அக்.,31 தீபாவளி என்பதால் திங்களன்று சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது.