திருவில்லிபுத்தூர்:
தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றிருந்த திருவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதா அங்கு சித்ரவதைக்கு உள்ளானது. இதையடுத்து யானையின் பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவப்பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தேக்கம்பட்டி முகாமிற்கு சென்றிருந்த “ஜெயமால்யதா புத்துணர்வு அடைவதற்கு” முன்பாகவே வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தேக்கம்பட்டி முகாமிலிருந்து தனி வாகனத்தில் புறப்பட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.யானையை பராமரிக்க சுப்பிரமணியன், திருப்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள னர். பாகன் இன்றி தவித்ததால் யானை அழைத்து வரப்பட்டதாக கோவில் நிர்வாகம்விளக்கமளித்துள்ளது. யானையை தக்கார் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.