tamilnadu

உணவுப் பொருட்களைத் திருடியதாகக் கூறி தலித் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!

போபால், ஆக.9- உணவுப்பொருட்களைத் திருடியதா கக்கூறி பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளை ஞரை நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்  கிய சம்பவம் பாஜக ஆளும் ம.பி. மாநிலத்  தில் அரங்கேறியுள்ளது.  காவல்துறையினரும், பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பு இளைஞர் மீதே வழக்குப் போட்டு அவரை சிறையிலடைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் அருகே உள்ள உணவுப்பொருட்கள் தயா ரிப்பு நிறுவனத்திலிருந்து சோயா பொட்  டலங்களை திருடியதாகக்கூறி, 32 வய தான இளைஞர் ஒருவரை அப்பகுதியினைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ள னர். மேலும், அவர் இந்துவா அல்லது இஸ்  லாமியரா என்பதை உறுதி செய்ய அவரது  ஆடைகளை களைந்து நிர்வாணமாகவும் ஆக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், இளைஞரைத் தாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட இளைஞரையே கைது செய் துள்ளனர். விசாரணையில் அவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்  போது சமூக வலைதளங்களில் வெளி யான நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞ ரைக் கைதுசெய்த கல்தாங்கா காவலர்  தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளார். இதற்கான உத்தரவை கர்கோன்  காவல்துறை கண்காணிப்பாளர் தரம்வீர்  சிங் பிறப்பித்துள்ளார். குற்றம் சாட்டப்  பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்,  பாதிக்கப்பட்டவரையே சிறையில் அடைத்  தது தொடர்பாக பதிலளிக்குமாறு, கல்தாங்கா காவல் நிலையப்பொறுப்பாளர் ராஜேந்திர சிங் பாகேலுக்கும் அவர் உத்தரவிட்டுள் ளார். மேலும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு  நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்  குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

;