tamilnadu

img

மோடி அரசு அரங்கேற்றிய சுங்கச்சாவடி வசூல் ஊழல் - முறைகேடுகள்

அ.அன்வர் உசேன் தென்னிந்தியாவில் உள்ள 41 சுங்கச் சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து மத்திய தணிக்கை ஆணையம் நடத்தியுள்ள ஆய்வில் ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. தமிழ்நாடு/கேரளம்/ கர்நாடகா/ தெலுங்கானா/ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய தென்னிந்தியாவில் 27,000  கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை கள் உள்ளன. இது மொத்த நெடுஞ்சாலையில் 19.85% ஆகும். அதே சமயத்தில் இந்த மாநிலங்களின் சுங்க  கட்டணம் வசூல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.28,534 கோடி. இது மொத்த சுங்க கட்டணத்தில் 28.75%.  சுமார் 20% உள்ள சாலைகளுக்கு தென்னிந்திய மாநிலங்களில் 29% சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.9940 கோடி  எனில் கேரளத்தின் பங்கு ரூ.730 கோடி  மட்டுமே! இதற்கு முக்கிய காரணம்  இடது ஜனநாயக அரசு சில முக்கிய சுங்கச் சாவடிகளில் தனது அதி காரத்தைப் பயன்படுத்தி கட்டணத்தை ரத்து செய்ததுதான்!

பயனர்களிடம் கூடுதல் வசூல்

சுங்கக் கட்டணம் மிகப்பெரிய வரு மானம் தரும் தொழிலாகிவிட்டது. மக்க ளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் சுங்கக் கட்டணத்தைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க எந்த வாய்ப்பும் இல்லை. எனவே பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் கொள்ளை லாபம் அடிக்கின்ற னர். இதில் எவருக்கெல்லாம் பங்கு  செல்கிறது என்பதை எவரும் ஊகிக்க லாம். அப்படி சட்டவிரோதமாக வசூல் செய்யப்பட்ட சுங்கக் கட்டணம் குறி த்து மத்திய தணிக்கை ஆணையம் சில உதாரணங்களை முன்வைக்கிறது.  *    கர்நாடகாவில் நத்தவலசா/சலகேரி /ஹெப்பலு ஆகிய சுங்கச் சாவடிகளில் பயனர்களிடமிருந்து ரூ.124.18 கோடி கூடுதல் சுங்க  கட்டணம் வசூல். *    தாம்பரம்- திண்டிவனம் சாலையில் பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.6.54 கோடி கூடுதல் வசூல். *    ஆந்திரப்பிரதேசம் மட்பம் சுங்கச் சாவ டியில் ரூ.1.31 கோடி கூடுதல் வசூல். *    தாம்பரம்- திண்டிவனம் சாலையில் பரனூர் சுங்கச்சாவடியில் பாலம் 1954ம் ஆண்டு கட்டப்பட்டிருந்தாலும் விதிகளை மீறி ரூ.22.10 கோடி கூடுதல் வசூல். தணிக்கை ஆணையம் எடுத்த மாதிரிகளில் மட்டும் இந்த நிலை. அப்படி யானால் தென்னிந்தியா மற்றும் தேசம்  முழுதும் பயனர்கள் எவ்வளவு நட்டம்  அடைகின்றனர் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

தனியாரின் பெரும் கொள்ளை

சமான பகுதிகளில் தனியார் சுங்கக் கட்டணம் வசூல் செய்கின்றனர். பூர்த்தி  செய்யப்பட்ட சாலைகளை பராமரிக் கும் பொறுப்பும் தனியாருக்கு தரப்படு கிறது. இதில் விதிகளுக்குட்பட்டு பல தனியாரிடம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு வர வேண்டிய பல்வேறு வருமானங்கள் பெறப்படுவது இல்லை. மாறாக, தனியார்கள் தாம்  நிறைய இழந்துவிட்டதாகக் கூறி, இடைவிடாமல் வசூல் செய்கின்றனர். அப்படி சில உதாரணங்களை தணி க்கை ஆணையம் பட்டியலிடுகிறது: *    தமிழ்நாட்டில் என்.எச். 44 சாலையில் தனியாரிடமிருந்து பெற வேண்டிய தொகை பெறாததால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.133.36 கோடி இழப்பு. *    இன்னொரு தனியார் நிறுவனத்திடம் ரூ.295.78 கோடி பெறப்படவில்லை. *    மதுரை-கன்னியாகுமரி பிரிவில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற தனியார், அவற்றை முழுமைப் படுத்தாத காரணத்தால் அவரிட மிருந்து பெற வேண்டிய அபராத தொகை ரூ.445.11 கோடி பெறவில்லை. *    தாம்பரம்-திண்டிவனம்/ மதுரை-கன்னியாகுமரி/திருச்சி-காரைக் குடி/குண்டுகொலுனு-விஜயவாடா/கேரளா எல்லை-கொலேகேலா ஆகிய நெடுஞ்சாலைகளில் பரா மரிப்புப் பணிகள் நடைபெறவில்லை. அதற்காக அந்தப் பணியை செய் யாத தனியாரிடமிருந்து அபராத தொகை ரூ.174.63 கோடி பெறப்பட வில்லை. இப்படி ஏராளமான தொகை தனி யார் ஏப்பம்விட தேசிய நெடுஞ்சாலை  துறை அனுமதிக்கிறது. நெடுஞ்சாலை துறையின் இழப்பு, தனியாரின் லாபம் அதில் எவருக்கெல்லாம் பங்கு செல் லும் என்பது நாம் அறிந்த ஒன்று. 

மறுக்கப்படும் வசதிகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் பய ணிக்க கட்டணம் தரும் பயனர்கள் சில அடிப்படை வசதிகளை எதிர்பார்க்கின்ற னர். அந்த வசதிகளை செய்து தர  வேண்டிய கடமை தேசிய நெடுஞ்சா லைத் துறை மற்றும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் தனியாருக்கு உண்டு. ஆனால் நிலைமை என்ன?  சாலை பயனர்களுக்கு போது மான கழிப்பறைகள் இல்லை. பல இடங் களில் கழிப்பறைகள் பராமரிப்பு இல்லா மலும் பயன்படுத்த இயலாமலும் உள்ளது. உணவகங்களும் சுங்கப்பகுதி களில் போதுமான ஆரோக்கியமான உணவை வழங்கும் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த வசதி இல்லை என தணிக்கை ஆணையம் விமர்சிக்கிறது. நெடுஞ்சாலைகளை அதிகமாக பயன்படுத்துவோர் கனரக வாகன ஓட்டிகள்தான்! பல மாநிலங்களுக்கும் பல ஆயிரம் மைல்களும் கடந்து அவர்கள் பயணிக்கின்றனர். எனவே அவர்களுக்கு ஓய்வு அறைகள் மற்ற வசதிகளும் வாகனங்களை பாது காப்பாக நிறுத்துவதற்கும் வசதிகள் தேவை. அவையும் முழுமையாக இல்லை என தணிக்கை ஆணையம் விளக்குகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துகள் நடந்தால் உடனடியாக நிவா ரணத்துக்கும் சிகிச்சைக்கும் வரு வதற்கான கட்டமைப்புகள் பல இடங் களில் போதுமான அளவுக்கு இல்லை;  சில இடங்களில் அறவே இல்லை எனவும் தணிக்கை ஆணையம் பட்டிய லிடுகிறது. பணம் அதிகமாக புழங்கும் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ஒரு  புறம் பயனர்கள் இழப்பை சந்திக்கின்ற னர். மறுபுறத்தில் தனியார் ஒப்பந்த தாரர்கள் அரசை ஏமாற்ற முனைகின்ற னர். ஆனால், இதன் ஒன்றிய அமைச்சர் தன்னை மிகவும் திறமையானவர் என புகழ்ந்து கொள்கிறார். எனினும்  தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டும் முறைகேடுகள் அவரது தற்பெருமை யை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர் களின் செயல்பாடுகளை கண்காணிக்க வோ அல்லது அவற்றை விமர்சிக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை. இவற்றை கண்காணித்து கருத்து சொல்லும் நாடாளுமன்றம் கேலிக்கூத்தான முறையில் சிதைக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்களின் செயல்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் செயலிழந்து நிற்கின்றன. குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் பத்திரிகைகள் வேட்டையாடப்படு கின்றன. பா.ஜ.க.வின் கட்சிக்கு உள்ளேயே கூட விவாதங்கள் நடப்பது இல்லை. மதப்பிளவுகளை கூர்மைப் படுத்தும் பணிகளில் மூழ்கியுள்ள பா.ஜ.கவுக்கு இந்த சூழலை புரிந்து கொள்ள நேரமோ அல்லது விருப்பமோ இல்லை. இதன் விளைவாக பல்வேறு துறைகளில் முறைகேடுகளும் ஊழ லும் திறமையின்மையும் தலைவிரித்தா டுவது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் மக்கள் இதற்கு பதிலடி தர தயாராகிக் கொண்டுள்ளனர்.