மதுரை, ஆக. 7- திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மணியரசு, கருப்பு டையார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர், அதில் “கடந்த 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆம் ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளியில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளின் நிலு வைத் தொகையை வட்டியுடன் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில், தமிழக அரசு சார்பாக கரும்புக் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும். எனக் கூறியுள்ளது. அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டுதல் களை வகுக்க மூன்று முதல் ஆறு மாதம் கால அவ காசம் வேண்டுமெனக் கூறினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “கரும்புக் கட்டுப்பாடு வாரியம் அமைப்ப தன் மூலம் கரும்பு விவசாயிகள் பெரிதும் பயன டைவார்கள், விவசாயிகளுக்கு எந்தவித நிலுவைத் தொகையும் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்யப்படும். கரும்புக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் விவசாயிகள் கரும்புகளை வழங்கி முழுமையாக நேரடியாக ஆதாயத்தைப் பெறமுடியும். எனவே, தமிழக அரசு கரும்புக் கட்டுப்பாடு வாரியத்தை இரண்டு மாதத்திற்குள் அமைக்க வேண்டும். அதற்கான அறிக்கையை அக்டோபர் 14- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்றார்.