மதுரை:
மதுரை தியாகி விஸ்வநாததாஸ் 135ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதனன்று திருமங்கலத்தில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரு. அனிஷ் சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல உரப்பனூர் பகுதியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். திருமங்கலம் -பள்ளபட்டி முதல் சொரிக்கம்பட்டி-ஜெ. ஆலங்குளம் வரை 160 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாடு மற்றும் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார மையம், நல்லமநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை ஆய்வு செய்தார்.