tamilnadu

தனி மனைகளை வரன்முறைப்படுத்த கால வரையறை நீக்கம்

தனி மனைகளை வரன்முறைப்படுத்த கால வரையறை நீக்கம்

2016-க்கு முன் விற்கப்பட்ட 

சென்னை, ஜூன் 1 -  2016 அக்டோபர் 20-க்கு முன்பு விற்கப்பட்ட தனி மனைகளை எந்த காலக்கெடுவும் இன்றி இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டு வசதித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளி யிட்ட அரசாணையின்படி, 2016 அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட  மனைகளுக்கான வரன்முறைப்படுத்தல் காலக்கெடு நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரையறை 2026 ஜூன்  30 வரை நீட்டிக்கபட்டிருந்தது. அமைச்சரின் அறிவிப்பு 2025-26 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானிய  கோரிக்கையின் போது வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016 அக்டோபர் 20-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளை இந்த தேதிக்கு முன்  பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடு வும் இன்றி மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும்  என அறிவித்தார். நகர ஊரமைப்பு இயக்குநரின் பரிந்துரையின் பேரில்  தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தனி மனை  வாங்கிய பொதுமக்கள் தாங்கள் பதிவு செய்த விற்பனை ஆவ ணங்களை அடிப்படையாகக் கொண்டு இணையவழி மூலம் விண்ணப்பித்து ஏற்கனவே உள்ள விதிகளின்படி வரன் முறைப்படுத்தி கொள்ளலாம்.