tamilnadu

img

ஏழைகளை கண்ணீர் சிந்தாமல் பாதுகாப்போம்!

குழித்துறை, பிப்.16- அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்பட  வேண்டும் என்பதோடு ஊழல் இல்லாத உள்ளாட்சியை ஏற்படுத்துவதை முன்னுரிமையாக கொள்ள வேண்டும். எந்த ஒரு சாதா ரண மனிதரிடமிருந்தும் எந்த வகை யான கையூட்டும் பெறாமல், ஒரு ஏழை யின் கண்ணீர்கூட நமது மண்ணில் விழாமல் இருக்க, அவர்களை அர வணைக்கும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட நமது அன்புக்குரிய சிபிஎம் வேட்பாளர்களால் முடியும் என திரு வனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்தி ரன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாயன்று (பிப்.15) குழித்துறை நகராட்சிக்குட்பட்ட  குழித்துறை சந்திப்பு, வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: முந்தைய ஆண்டுகளில் செய்யப் பட்ட வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதி காரிகளின் ஆட்சியால் சீர்குலைந்து ள்ளன.

மிகவும் முக்கியமாக மக்க ளின் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் இந்த அதிகார அமைப்புகளால் வழங்க முடிய வில்லை என்பது சொல்லித் தெரிய  வேண்டியதில்லை. அதற்கு முந்தைய 20 ஆண்டுகள்  குழித்துறை நகராட்சி யில் ஊழலற்ற ஆட்சி நடத்தி சாதாரண மனிதனின் சிரமங்களை புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சி மீண்டும் இங்கு தொடர வேண்டும். மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட வர்கள் சிபிஎம் வேட்பாளர்கள் என்பதை இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டபோது சிபிஎம் வேட்பா ளர்கள் மக்கள் மத்தியில் பணியாற்றிய தாக குறிப்பிட்டார்கள். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மக்களை திரும்பிப் பார்க்காத அதிகாரிகள் ஆட்சி நடந்தது. அவர்கள் சட்டத்தின் பார்வை யிலிருந்து மட்டுமே செயல்பட்டார்கள். அப்போதெல்லாம் நமது வேட்பா ளர்கள்- நமது தோழர்கள் ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுடன் நின்று  செயல்பட்டார்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஊழல் இல்லாத ஆட்சிக்காக, ஊழ லற்ற நாட்டுக்காக நீங்கள் அனைவரும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்க ளிக்க வேண்டும்.

கேரள உள்ளாட்சிகளின் மகத்துவம்

கேரளத்தில் பினராயி விஜயன்  தலைமையிலான அரசு மீண்டும் வந்தது மற்ற கட்சிகள் நடத்துவது போல் பொய் பிரச்சாரங்கள் மூலம் அல்ல  மக்கள் ஒவ்வொருவரின் சிரமங்களையும் அறிந்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் அந்த சிரமங் களை கடந்து உரிமைகளையும் சேவை களையும் பெறுவதற்கான மக்கள் நல மையங்களாக செயல்படுகின்றன. சாலை வசதி, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் கேரளம் முன்னேற்றம் கண்டுள்ளது. கேரளத்திலிருந்து என்னைப்போன்ற மக்கள் பிரதிநிதிகள் உயர்வாக கூறும் இரண்டு விசயங்கள் கல்வியும் சுகாதாரமும். கோவி ட்டின் மிகப்பெரிய சிரமங்களை அனுபவித்த போதிலும் கேரள மக்கள் ஒருவேளை கூட பட்டினி கிடக்கும் நிலை ஏற்படவில்லை. அத்தகைய வளர்ச்சித் திட்டங்களும் நலத்திட்டங்களும் அமலாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக் களித்து அன்புக்குரிய நமது வேட்பாளர் களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இனிவரும் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் உயர்த்திப்பிடிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள்,  மக்கள் நல, வளர்ச்சிக்கான செயல்பாடு கள் சாதாரண மக்களின் வாழ்க்கை மேம்பட சாத்தியமானவை என்பதை  பலகட்டங்களிலும் காண முடிகிறது. மிக முக்கியமாக திருவனந்தபுரத்திலிருந்து இங்கு வருவதற்கான பயணத்தையே குறிப்பிடலாம். மிகவும் ரம்மியமான சாலைகளிலிருந்து மிக மோசமான சாலையில் பயணித்து இங்கே வரவேண்டிய நிலை உள்ளது.  அதாவது கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள் சீரமைப்பு பணிகூட நடக்காத சூழலை பார்க்க முடிகிறது. மழை  போன்ற இயற்கை துயரங்களில்கூட இங்குள்ள மக்களுக்கு தேவையானவற்றை செய்துதர இங்குள்ள அதிகார அமைப்பு கள் சாதிக்கவில்லை என்பதைக் காண முடிகிறது. அவற்றை எதிர்கொண்டு மக்கள் நலன் சார்ந்த ஒருமாற்றத்தை ஏற்படுத்த கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.