tamilnadu

img

போர் வேண்டாம் என்பவர்கள் மீது அவதூறு தொல்.திருமாவளவன் கண்டனம்

போர் வேண்டாம் என்பவர்கள் மீது அவதூறு தொல்.திருமாவளவன் கண்டனம்

திருச்சிராப்பள்ளி,  மே 11-  திருச்சி விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடையே பேசிய தொல் திருமாவள வன், இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தப் பட்டுள்ளது என்ற அறிவிப்பு வருகிறது. அந்த  அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிராப் செய்தார் என்பது புதிராக இருக் கிறது. இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு  இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையே சமாதானம் வேண்டும், நிரந்தர தீர்வு வேண்டும் என்று இந்தியாவில் மட்டுமல்ல; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆனால்  நிரந்தர தீர்வு தேவை. இரண்டு நாடுகளுக் கிடையே சுமுகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் தலை  தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பெரும் தீங்கு விளை விக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவ டிக்கைகளை ஜனநாயக கட்சிகள் அனை வரும் ஆதரிக்கிறோம். இந்தியா, பாகிஸ் தான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து  செயல்பட வேண்டும். இரண்டு நாடு களுக்கு இடையே சுமுகமான உறவை பேண நிரந்தர தீர்வை காண வேண்டும். போர் வேண்டும் என்று விரும்புகிற சக்தி கள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அவ தூறு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு இல்லா மலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது.   வெளியுறவு கொள்கை தொடர்பாக தற்பொழுது  எந்த கருத்து கூறினாலும், சில இந்துத்துவ  செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவ தாக மாறிவிடும்” என்றார்.