tamilnadu

திருச்செந்தூர் கோவில் வசூல் ரூ.3 கோடியை தாண்டியது

திருச்செந்தூர்,பிப்.26- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 2 ஆம்  தேதி, 11- ஆம் தேதி, 25 ஆம் தேதியும்  மூன்று நாட்கள் உண்டியல் எண்ணப் பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம்  பீடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். ரூ. 3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 காணிக்கை யாக கிடைத்தது. தங்கம் 2 ஆயிரத்து 284 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 517 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 132-ம் கிடைத்தது. இக்கோவிலில் முதன் முறையாக கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.3 கோடியை தாண்டியது குறிப் பிடத்தக்கது.