நவம்பர் புரட்சி தினவிழா, தீக்கதிர் சென்னைப்பதிப்பு 30வது ஆண்டு விழா சைதாப்பேட்டையில் உள்ள தீக்கதிர் அலுவலகத்தில் திங்களன்று (நவ.7) நடைபெற்றது. பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை பொதுமேலாளர் என். பாண்டி, மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், டிஜிட்டல் பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், சென்னை பதிப்பு முன்னாள் பொறுப்பாசிரியர் அ.குமரேசன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக பொதுமேலாளர் (பொறுப்பு) சி. உஷா வரவேற்றார்.