மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்க ளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போல நமது பிரதமரும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்களது வேட்பாளர்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். நீட்டி, முழக்கி கண்கள் எல்லாம் கோவைப்பழம் போல சிவக்க, ஆவேசத்துடன் அவர்கள் பேசும் போது, அவர்களைப்பற்றி எல்லாம் தெரிந்த நமக்கே அவர்கள் இரு வரும் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பத் தோன்றுகிறது! நம்மையே அவர்கள் ஒரு கணம் அசைத்துப்பார்க்கிறார்கள் என்றால் அக் கூட்டத்தில் நேரடியாகப்பங்கேற்று அவர்க ளுடைய பேச்சுக்களை கேட்கின்ற அப்பாவி பொதுமக்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் இரண்டு பேரும் சொல்லிவைத்தாற் போல் மருந்துக்குகூட ஒரு இடத்திலும் ஒரு முறை கூட உண்மை பேசவில்லை.
மாபாதகம்...
அரசியல் மேடைகளில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை உண்மையைப்போல பேசுவதை ஒரு “கலையாகவே” தங்கள் தொண்டர்களுக்கு தனிபயிற்சியாக தரும் ஒரு இயக்கத்தின் முன்னணி தலைவர்களாகிய அவர்கள் வேறு எப்படி பேசுவார்கள்? மோடியும், அமித்ஷாவும் அந்த இயக்கத்தின் தலைவர்க ளாகவே மட்டும் இருந்து இப்படி பொதுமேடை களில் அபாண்டமாக பொய்களை பேசி னார்கள் என்றால் அதைப்பற்றி நாம் அதிகம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் ஒருவர் உலகின் மிகப்பெரிய செயல்படும் ஜனநாயகத்தின் பிரதமர். மற்றொ ருவர் 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சமூக அமைதிக்கும் பொறுப்பு ஏற்கவேண்டியவர். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர்களது அனைத்து அசைவு களும் நகர்வுகளும் கோடிக்கணக்கான மக்களது வாழ்க்கையையும், ஒட்டுமொத்த இந்தியாவின் நலனையும் உள்நாட்டிலும், உலக அளவிலும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அறிந்து பேசுகிறார்களா அல்லது அறியாமல் பேசுகிறார்களா என்று நமக்கு புரியவில்லை. அறிந்து பேசினால் இது மாபாத கம். அறியாமல் பேசினால் மகாகேவலம். இந்திய அரசியல் சாசன சட்டப்படி நடப்பேன் என்று இறைவன் பெயரால் உறுதிமொழி எடுத்த நம் பிரதமர் எப்படி ஒவ்வொரு பிரச்சா ரக்கூட்டத்திலும் வெறுப்பையும், துவேஷத்தை யும் மூட்டை மூட்டையாக விதைக்கிறார். இனம், மதம், மொழி, மாநிலம் என்ற வேறுபாடுகள் பாராமல் நாட்டுமக்கள் அனைவரையும் இந்தி யர்களாகவே பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்ட பிரதமரும், உள்துறை அமைச்ச ரும் இந்நாட்டின் மண்ணின் மக்களான முப்பது கோடி சிறுபான்மை இஸ்லாமியர்களை ஏன் இவ்வளவு அந்நியப்படுத்துகிறார்கள்? ஏன் அவர்களை இந்நாட்டின் பெரும்பான்மை யான இந்துமக்களுக்கு எதிரான ஜென்மப்பகை வர்களாக கட்டமைக்கிறார்கள்?
வாய் கூசாத பொய்கள், வக்கிரப் பேச்சுகள்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் இந்தியா கூட்டணி வென்றால் உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை எடுத்து முஸ்லிம்களிடம் கொடுத்துவிடு வார்கள் என்று பேசினார். இந்த முறை ஜார்க் கண்ட்டில் பேசும்போது பழங்குடியின மக்க ளைப் பார்த்து உங்கள் பெண்களையெல்லாம் ‘அவர்களே’ திருமணம் செய்துகொள்வார்கள். குழந்தைகளை பெற்று அனைவரையும் இஸ்லாமியராக மதம் மாற்றம் செய்து பழங்குடி யினத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று எச்சரித்தார். பழங்குடி மக்களது ஜனத்தொகை குறைந்து இஸ்லாமியர்களது ஜனத்தொகை கூடி விட்டது, பழங்குடிமக்கள் வாழும் நிலப்பரப்பு சுருங்கி இஸ்லாமியர்கள் வாழும் நிலப்பரப்பு அதிகமாகிவிட்டதென்றும் பொய்யான செய்தி களை எவ்வித ஆதாரங்களும் இன்றி வாய் கூசாமல் சொன்னார். நேற்று மகாராஷ்டிராவில் பேசிய பிரதமர் நடக்கப்போகும் தேர்தல் ஒரு சட்டமன்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. சத்ரபதி சிவாஜி மகராஜை கொண்டாடுகிறவர்க ளுக்கும் அவுரங்கசீப்பை போற்றுகிறவர்க ளுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என்றார். அவர் மனதில் ஏன் இவ்வளவு வக்கிரம்? அதைப்போல மகாராஷ்டிராவில் அமித்ஷா ஒருபடி அதிகமாகச் சென்று இந்து மக்களை பார்த்து இந்தியா கூட்டணிவென்றால் உங்கள் நிலங்களையெல்லாம் எடுத்து வக்புவாரிய சொத்துக்களாக மாற்றிவிடுவார்கள் என்று பயமுறுத்தினார். மேலும் பட்டியல் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த இடங்களையெல்லாம் இஸ்லாமிய ருக்கு வழங்க இருக்கிறார்கள் என்றும் எச்ச ரித்தார். மற்றும் சில இடங்களில் அரசுப்பணிக ளின் ஒப்பந்தங்களில் ஒரு பகுதியை இஸ்லாமி யர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரைவில் சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிடுகிறது என்றும் பாஜக பிரச்சாரம் செய்கிறது.
நம்புவார் யார்?
அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி யிலும், அடல் பிகாரி வாஜ்பாயின் கூட்டணி ஆட்சியில், ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் குடியரசு தலைவராகவும், ஒரு சிறுபான்மை சீக்கியர் பிரதமராக இருந்து நடத்திய ஆட்சியி லும் எல்லாம் இந்துக்களுக்கு இப்படிப்பட்ட எந்த கேடும் நடக்காமல் அவர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்தபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுமையான சித்தாந்தப் பயிற்சி பெற்ற சுயம் சேவக்குகளான ஒருவர் குடியரசுத் தலைவராகவும், இன்னொருவர் பிரதமராக வும், மற்றுமொருவர் உள்துறை அமைச்ச ராகவும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக் கின்றபோது இந்துக்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகளெல்லாம் நடந்துவிடும் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்வ தை யார் நம்புவார்கள்? 2014 இல் பிரதமர் இப்படி பேசியிருந்தால் கூட அனுபவம் இன்மையால் இப்படி பேசுகிறார் என்று நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால் பதினொரு ஆண்டுகளாக, அசைக்கமுடியாத பெரும்பான்மையுடன், எதிர்த்து கேள்வியே கேட்கமுடியாத அதிகாரத்துடன் ஆட்சிசெய்த மோடியும், அமித்ஷாவும் இப்படிப் பேசுவது தான் மிகப்பெரிய வேடிக்கை! பங்களாதேஷிலிருந்து பலர் சட்டவிரோத மாக ஜார்க்கண்டில் குடியேறியதால் அங்கு இஸ்லாமியர்களின் மக்கள்தொகை கூடி விட்டது என்று குற்றம்சாட்டும் மோடியும் அமித்ஷாவும் யாரை ஏமாற்ற நினைக்கின்ற னர்? நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தாமே உள்ளது. அந்நியரின் சட்டவிரோத குடியேற்றத்தை நீங்கள் இருவரும் ஏன் தடுக்கவில்லை? அப்படி சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீங்கள் ஏன் வெளியேற்றவில்லை? அப்படி வெளி யேற்றும் நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து அதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனவா?
கோவணத்தோடு ஓடும் எலி...
நம் நாட்டு இஸ்லாமியரோ அல்லது அவர்க ளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ, அயல் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியருக்கு குடி உரிமைகள் வழங்கவேண்டும் என்று உங்களி டம் என்றாவது கேட்டார்களா? இப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில் சட்டவிரோத குடி யேற்றங்கள் மீது பதினோரு ஆண்டுகளாக மோடியும் அமித்ஷாவும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லையே! ஏன்? மோடியும் அமித்ஷாவும் செய்த பாவங்களை எதிர்க்கட்சி யினர் மீது ஏன் சுமத்த வேண்டும்? எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் - “எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?” என்று. ஆம்! அப்படி ஓடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பதினோரு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பாஜகவுக்கு தங்களது சாதனைகள் என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த எந்த சிறப்புத்திட்டங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இளைஞர்க ளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எந்த பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வில்லை. விவசாயிகளின் கடன்களையும், படித்து விட்டு வேலை கிடைக்காத மாணவ - மாணவியரின் தவணை தவறிய கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நிறை வேற்றித் தரவில்லை. தேய்ந்து கொண்டே வரும் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு முறையான நிதிப்பங்கீட்டை வழங்காமல், நன்றாக செயல்படும் மாநிலங்களையும் திவா லாகும் நிலைக்குத் தள்ளியது என்று அவர்கள் செய்ய தவறியவைகளை நீண்ட பட்டியலாக எழுதிக்கொண்டே இருக்கலாம். பதினோரு ஆண்டுகள் அவர்கள் என்ன தான் செய்தார் கள் என்று ஒரு கேள்வி எழும். எப்போதோ படித்த ஒரு புதுக்கவிதை என் நினைவுக்கு வருகிறது. பதினோரு ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள் என்ற பட்டியல். என் நினைவில் நின்றதை எழுதுகிறேன். இதுதான் அவர்களின் செயல்பாடு,
“ காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!
கடலிலிருந்து மீனவர்களை விரட்டு!
பெருநகரங்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டு!
டெல்டாவிடமிருந்து விவசாயிகளை விரட்டு!
சிறுநகரங்களில் இருந்து சிறுதொழில், சிறுவணிகரை விரட்டு!
மாநிலங்களில் இருந்து மண்ணின் மக்களை விரட்டு!
ஊர்தோறும் சேரிமக்களை ஓட ஓட விரட்டு!
சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்க
ளை பிடுங்கிக்கொண்டு அவர்களை சித்ரவதை செய்!
பாசிச வன்முறை சக்திகளை கட்டவிழ்த்து
விட்டு பட்டியல் இன மக்களை மான
பங்கப்படுத்தி வன்கொடுமைசெய்!
காட்டைக்கொளுத்து!
கடலை நஞ்சாக்கு!
பூமியின் மறுபுறம் வரை துளையிடு!
வாயு, கரி, எண்ணெய் என எதையும் விடாதே!
இயற்கை வளங்களை பன்னாட்டு கம்
பெனிகளின் பகல் கொள்ளைக்கு திறந்து
விடு!
அரசு உடைமைகள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் தானம் கொடு!
ஏழை மக்களின் சேமிப்புகள் அனைத்தை
யும் பெருமுதலாளிகளுக்கு வராக்கட
னாக அள்ளிவிடு!
பேச்சுரிமை பறி!
எழுத்துரிமை பறி!
வாழ்வுரிமை பறி!
போராட்ட உரிமை பறி!
சாதிவெறிக்கு சாம்பிராணி போடு!
மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்து!
ஏழைகளுக்காக போராடுகின்றவனை உயிருள்ளவரையில் சிறையில் போடு!
நாட்டின் வளங்களை அனுதினமும் கொள்ளையடி!
அக்கொள்ளைக்கு துணை போவதுதான் தேசபக்தி என்று சொல்!
கார்ப்பரேட்டுகள், காவிகளின் கால்களை நக்கிக்குடி!
அதை நாட்டின் மானம்காக்கும் செயல் என உன் ஊடக அடிமைகள் ஊருக்கு சொல்லட்டும்!
எதிர்த்துக்கேட்போர் இந்த மண்ணிலேயே இருக்கக்கூடாது!
அவர்களை “இந்துவிரோதி” என அடை
யாளப்படுத்து!
கல்வியை காவிமயமாக்கு!
இதிகாசத்தை வரலாறு என பாடப்புத்த
கங்களில் எழுது!
உண்மையான வரலாற்றின் மூலங்க
ளையெல்லாம் அழித்துவிடு!
இதை தட்டிக்கேட்பவனை அர்பன் நக்ஸல் என்று பிரச்சாரம்செய்!
ஊடகம் யாவையும் ஊமையாக்கு!
உனக்கு மட்டும் ஊதுகுழலாக்கு!
ஜனநாயக நிறுவனங்களையெல்லாம் உன் ஏவலாட்களால் நிரப்பு!
இந்த அக்கிரமங்களையெல்லாம் நியாயப்
படுத்த நீதித்துறையை வளைத்துப்போடு!
அதுவும் முடியவில்லையென்றால் புதுச் சட்டம் போடு!”
இப்படித்தானே பதினோரு ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது! இதையெல்லாம் நாங்கள் செய்தோம் என்று ‘அவர்களால்’ சொல்லமுடி யுமா? அதற்காகத்தான் இந்தநாட்டின் சிறு பான்மையின மக்களை பெரும்பான்மை மக்க ளின் எதிரிகளாக கட்டமைக்கிறார்கள்! சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம்.பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால்,எல்லோரையும் எப்போ தும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது!