tamilnadu

img

வேண்டுதல்... - உதயசங்கர்

நடுக்காட்டில் ஒரு கிணறு இருந்தது. அதில் தண்ணீர் கிடையாது. உள்ளே இருட்டாக இருக்கும். விலங்கு
களும் பறவைகளும் அதை வேண்டுதல் கிணறு என்று சொன்னார்கள். 
என்ன வேண்டுமோ அதை அந்தக் கிணற்றுக்குள் குனிந்து சொல்லிவிட்டால் போதும் அது நடந்து விடும் என்று அனைத்து மிருகங்களும் நம்பின.
ஒவ்வொரு முழுமதி நாளிலும் விலங்குகள் சென்று அவரவர் வேண்டுதலைச் சொல்லுவார்கள்.
சிங்கம்  “ பசிக்கும் போதெல்லாம் இரை கிடைக்க வேண்டும் “ என்றது.
கழுதைப்புலி, “ எப்போதும் செத்த விலங்குகள் கிடைக்க வேண்டும்” என்றது.
வரிக்குதிரை, “ மழை பெய்து புல் முளைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்” என்றது.
முதலை, “ மழை பெய்யக்கூடாது.. எல்லாவிலங்கு
களும் நான் இருக்கும் குட்டைக்கு வரவேண்டும்..” என்றது.
காட்டுப்பன்றி, “ கிழங்குகள் எப்போதும் கிடைக்க வேண்டும்..” என்றது.
யானை, “ என்னுடைய ஒரு குட்டியாவது பிழைத்தி
ருக்க வேண்டும்..” என்றது.
பாம்பு  “ எனக்கு எப்போதும் தவளைகளும் எலிகளும் 
கண்ணில் படவேண்டும்..” என்றது.
குள்ளநரி, ” நிறைய முயல்கள் பெருக வேண்டும்..”  என்றது.
இப்படி எல்லா மிருகங்களும் அவரவர் விருப்பங்க
ளைச் சொன்னார்கள்.
கடைசியாக ஒரு குட்டி முயல் வந்தது. அதற்குக் கிணற்றின் வாய் எட்டவில்லை. குதித்துக் குதித்துப் பார்த்தது. குரங்கு அதைக் கையில்  தூக்கியது.
அப்போது அந்தக் குட்டி முயல் சொன்னது.
“ மனிதர்கள் இந்தக் காட்டுக்குள் வராமல் இருக்க வேண்டும்..”