tamilnadu

img

விளையாட்டு...

கராச்சி மைதானத்தில் இந்திய கொடி இல்லை

9ஆவது சீசன் மினி உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீ ரகத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பிரச்சனையை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுத்த நிலையில், இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.  மேலும் ஜெர்சியில் பாகிஸ்தான் அணியின் பெயரை அச்சிட முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியதாக செய்தி கள் வெளியானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கண்டனம் தெரிவித்தநிலையில், “நாங்கள் அப்படி எதுவும் திட்டமிடவில்லை” என பிசிசிஐ மழுப்பியது.  

அதே போன்று தொடக்க விழா,  கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்வு களிலும் இந்திய அணி கேப்டன் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது. இதனால் பிசிபி கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், இந்திய அணி  பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும்  மினி உலகக்கோப்பை நிகழ்வுகளை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவ தால் கராச்சி மைதானத்தில் இந்திய கொடியை புறக்கணித்துள்ளது பிசிபி. மினி உலகக்கோப்பையில் பங்கேற்கும் மற்ற 7 நாடுகளின் கொடி உள்ளது. ஆனால் இந்திய மூவர்ண கொடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பனிப்பொழிவு இல்லை

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் 5ஆவது “கேலோ இந்தியா” குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 22 முதல் 25 வரை நடத்த திட்ட மிடப்பட்டது. ஆனால் போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக குல்மார்க்கில்  போதுமான அளவு பனிப்பொழிவு இல்லை. இதனால் அங்கு நடைபெறவிருந்த குளிர்கால போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  பனிப்பொழிவு தொடர்பாக வானிலை மாற்றம் நிகழ்ந்த வுடன் “கேலோ இந்தியா” குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான புதிய தேதிகள் விரைவில் அறி விக்கப்படும் என ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தெரி வித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வானிலை ஆய்வு முக்கியம்

குளிர்கால விளையாட்டு பனிப்பிரதேசங்களில் நடத்தப் படுபவை ஆகும். பனிச்சறுக்கு முதல் அனைத்து விளை யாட்டுகளிலும் கடினமான பாறை வடிவில் தரைப் பகுதிகள் இருக்க வேண்டும். அதே போல கடினமான தரைப்பகுதிக்கு மேற்பகுதியில் மணல் போன்ற மிருதுவான பகுதியும் இருக்க வேண்டும். இந்த மிருதுவான பகுதிக்கு நல்ல பனிப்பொழிவு சூழல் இருந்தால் தான் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியும். ஆனால் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் வானிலை தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்யாமல் போட்டி நடத்த மட்டுமே ஏற்பாடு செய்து, தற்போது பனிப்பொழிவு இல்லாமல் போட்டியைத் ஒத்தி வைத்துள்ளது. 

சீனா தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே?

2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பெய்ஜிங் ஐஸ்லாந்து நாட்டைப் போன்று அதிக பனிப்பொழிவு உள்ள பகுதிகள் கிடையாது. மிதமான பனிப்பொழிவு உள்ள பகுதி ஆகும். ஆனாலும் போட்டிக்கு எவ்வித சிக்கலும் வரக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பெய்ஜிங் பகுதியில் செயற்கையாக பனிப்பொழிவை ஏற்படுத்தி வெற்றிகரமாக  குளிர்கால ஒலிம்பிக் தொடரை நடத்தி முடித்து சீன அரசு. இதே தொழில்நுட்பத்தை இந்தியாவும் பயன்படுத்தலாமே? என்ற கோரிக்கைகள் சமூகவலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தேசிய கீதத்திற்கு கனடாவில் கடும் எதிர்ப்பு

கனடா நாட்டின் முக்கிய நகரான மான்டிரியல் நகரில் 4 நாடுகள் (கனடா, அமெரிக்கா, சுவீடன், பின்லாந்து) பங்கேற்கும் ஐஸ் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி (இந்திய நேரப்படி பிப்., 16) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதின. போட்டிக்கு முன் அமெரிக்க தேசியக் கீதம் ஒலிக்கப்பட்டது. அப்பொழுது கனடா ரசிகர்கள் அமெரிக்கா விற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அமெரிக்கர்களும் பதிலுக்கு கோஷங்களை எழுப்ப, மைதானத்தில் மட்டுமின்றி மான்டிரியல் நகரத்திலும் பதற்றமான சூழல் நிலவியது. சமீபத்தில் கனடா நாட்டிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி 25% வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே அமெரிக்காவிற்கு எதிராக கனடா நாட்டினர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.