tamilnadu

img

தீக்கதிர் 63ஆம் ஆண்டு துவக்க நிகழ்வு

தீக்கதிர் 63ஆம் ஆண்டு துவக்க நிகழ்வு

மதுரை, ஜுன் 29 - ஊடக உலகில் உண்மையின் பேரொளியாம் தீக்கதிர் நாளிதழின் 63ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி மதுரை தீக்கதிர் வளாகத்தில் ஞாயிறன்று செய்தி ஆசிரியர் ப.முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், செம்ம லர் மூத்த துணை ஆசிரியர் தி.வரதராசன், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் பேசினர்.  நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தீக்கதிர் கட்டுரையாளர்,  மறைந்த தோழர் திண்டுக்கல் க.அறம் அவர்கள் எழுதி, எழுத்தாளர் ஆர்.எஸ்.மணி தொகுத்த கட்டுரை தொகுப்பு நூல் பற்றி பேரா. விஜயகுமார் திறனாய்வு செய்து உரை நிகழ்த்தினார்.  தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்த, துணை ஆசிரியர் ஆர்.நித்யா நன்றி கூறினார்.  வைகை பிரிண்ட்டர்ஸ் மேலாளர் கே.பாண்டி யராஜன் உள்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.