tamilnadu

img

தீக்கதிர் சந்தா அளிப்பு

திருச்சி பொன்மலையில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மகேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சின்னச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.  87 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகையை திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தீக்கதிர் நாளிதழ் 68 சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் கே. வீரபாண்டி , மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

;