‘காலனி’ என்ற சொல் நீக்கம்!
முதல்வருக்கு ஆணையம் பாராட்டு
சென்னை, மே 9 - பொதுப் பயன்பாடு மற்றும் அரசு ஆவ ணங்களில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்த தற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலை வர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்த ராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக் குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், ‘பொதுப் பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல் படுவது உறுதியாகி இருக்கிறது. இதற் காக முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மனப்பூர்வமான பாராட்டையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறது’ என கூறியுள்ளனர்.