ஒன்றிய பட்ஜெட் 2025-26 முற் றிலும் கார்ப்பரேட் நலன் களை மட்டுமே முன்னி றுத்தி, ஊரக மக்களின் வாழ்வாதா ரத்தை சீரழிக்கும் வகையில் அமைந் துள்ளது என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத் தலை வர் ஏ.விஜயராகவன் மற்றும் பொதுச்செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் கடுமையாக விமர்சித் துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கையில்,”கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சிக்கு ரூ.265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் ரூ.190.7 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. ஒதுக் கப்பட்ட நிதியில் கூட 30% செலவ ழிக்கப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெறும் ரூ.86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு ரூ.2.50 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும், அது புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டத்திற்கான நிதி ரூ.70,162.9 கோடியிலிருந்து ரூ. 67,000 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) திட்டத் திற்கான நிதி ரூ.54,487 கோடியிலி ருந்து வெறும் ரூ.54,500 கோடியாக சிறிதளவே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ரூ.32 கோடியை செல விட முடியாமல் போனது. வீடற்ற வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு ஆகும்.
கல்வித்துறைக்கு 2024-25இல் ரூ.125.64 கோடியாக இருந்த நிதி 2025-26இல் ரூ.126.65 கோடியாக சிறி தளவே உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான நிதி ரூ.13,000.2 கோடி யிலிருந்து ரூ.13,611 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலா ளர்களின் உண்மையான ஊதியம் தொடர்ந்து குறைந்து வரும் நிலை யில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2023- 24இல் ஆண்-பெண் இருபாலருக் கும் உண்மையான மாத ஊதியம் 2017-18ஐ விட குறைவாகவே உள் ளது. இது கவலை அளிக்கும் விஷ யம் ஆகும். இந்த மக்கள் விரோத பட்ஜெட்டிற்கு எதிராக கிராமப்புற மக்களை அணிதிரட்டுமாறு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்திய செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் நலத்திட்டங்களுக்கான முதலீடு களை அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.