ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், மாநில உரிமைகளை பாதுகாக்க போராட்டம்
கார்ப்பரேட்டுகள், மதவெறி சக்திகளின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக தீவிர செயல்பாடு தேவை
கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சி நிரல், பெரும் பான்மை மதவெறி சக்திகள் ஆதரிக்கும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக நாம் தீவிர மாகச் செயல்பட வேண்டும். ஜனநாயகம், மதச்சார் பின்மை, சோசலிசம் மற்றும் மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்பு களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயகப் போராட் டங்களை நடத்திட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறைகூவல் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி வியாழனன்று மதுரையில் ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை வரு மாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் தொடர்பாக இன்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கருத்த ரங்கில் பேச வாய்ப்பளித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. ஒன்றிய அரசு-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் மீதான பிரச்சனைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்க ளால் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக இந்தக் கருத்தரங்கம் சமகாலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறி யிருக்கிறது.
சர்க்காரியா, புஞ்சி ஆணையங்கள்
கடந்த எழுபது ஆண்டுகளாக, அரசியல் மற்றும் நிதி தொடர்பாக அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகளின் அதி காரங்களை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கள் தொடர்ந்து எழுந்துள்ளன. 1980களிலும் பின்னர் 2000களின் முதல் பத்தாண்டுகளிலும், இது தொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திட ஒன்றிய அரசு சர்க்காரியா மற்றும் புஞ்சி ஆணையங்களை அமைத்தது. அந்த ஆணையங்கள் பல பயனுள்ள பரிந்துரைகளை சமர்ப்பித்தன. துரதிர்ஷ்டவசமாக, அவற்றில் பல நடை முறைக்கு வரவில்லை. இருப்பினும், சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால், நமது அரசமைப்புச் சட்டம் அசாதாரண சூழ்நிலைகளில், அதாவது பிரிவினைக்குப் பிறகு பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு, சுதந்திரம் அடைந்தபோது உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம். அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத் தில் நிலவிய இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, அது மிகவும் வலுவான மையப்படுத்தப்பட்ட அம்சங்களையும், அவசரகால விதிகளையும் கொண்டிருந்தது.
கூட்டாட்சிக் கோட்பாடு இன்று எதிர்கொள்ளும் ஆபத்து
அது எப்படியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் கேள்வி என்ன வென்றால், சமீப காலங்களில், நமது அரசியல் சாதாரண காலங்களிலும் கூட, மேலும் மேலும் ஒற்றைத்தன்மை யுடையதாக (unitary in nature) மாறி வருகிறதா என்பது தான். இந்தியாவில் கூட்டாட்சிக் கோட்பாடு இன்று எதிர் கொள்ளும் ஆபத்து இதுதான் என்று நான் கூறவிரும்பு கிறேன். இந்தப் போக்கை ஜனநாயக முறையில் நாம் எவ்வளவு சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தே எதிர்கால வாய்ப்புகள் அமைந்திடும்.
அம்பேத்கரின் நம்பிக்கையை பொய்யாக்கிய 356 ஆம் பிரிவு
கூட்டாட்சிக் கோட்பாடு இப்போது நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக நீதித் துறை வாயிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1990களில் இருந்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலையீடுகள் உள்ளன. அரசமைப்புச்சட்ட எந்திரத்தின் முறிவு ஏற்பட்டதாகக் கருதப்படும் ஒரு மாநிலத்தின் நிர்வா கத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்த உதவும் 356ஆவது பிரிவின் கீழ் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நமது அரசமைப்புச்சட்டத்தின் கீழ் மிகவும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரிவாகும். அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவு ஓர் இறந்த கடிதமாகவே இருக்க வேண்டும் என்கிற டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நம்பிக்கையை இது பொய்யாக்கிவிட்டது. இதைச் சொன்னபிறகு, ஒன்றிய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயான அரசியல் அம்சம் குறித்து விவாதிப்பதற்கு முன், நிதி தொடர்பான பிரச்சனையை முதலில் எடுத்துக்கொள்வோம்.
செலவினம் 62 சதவீதம்; வருவாய் 38 சதவீதம்
அரசமைப்புச்சட்ட ரீதியாக வழங்கப்பட்ட சட்டமன்றத் துறையில் மாநிலங்களின் பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரங்களை அங்கீகரிப்பது ஒரு கூட்டாட்சி அமைப் பின் அடிப்படைக் கொள்கையாகும். 15ஆவது நிதி ஆணையத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபடி, மாநி லங்கள் நிதி அதிகாரங்களின் உள்ளார்ந்த ஏற்றத் தாழ்வை எதிர்கொள்கின்றன. மொத்த செலவினக் கடமை களில் மாநிலங்கள் கிட்டத்தட்ட 62 சதவீதத்தைக் கொண்டி ருந்தாலும், மொத்த வருவாயில் 38 சதவீதத்தை மட்டுமே திரட்டும் அதிகாரம் அவற்றுக்கு உள்ளது.
2015-16 முதல் செலவுச் சுமை அதிகரிப்பு
ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த நிதி ஏற்றத்தாழ்வு மேலும் மோசமடைந்து வருகிறது. இதில் மாநிலங்கள் அதிகரித்து வரும் செலவுச் சுமையைச் சுமக்க வேண்டி யுள்ளது. 2015-16 முதல், இந்தத் திட்டங்களில் பெரும் பாலானவற்றில் மாநிலங்களின் பங்கு 25 சதவீதத்திலி ருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒன்றிய திட்டமென கூற நிர்ப்பந்தம்
தற்போது, ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்க ளின் நுணுக்கமான விவரங்களை ஒன்றிய அரசு முடிவு செய்து, மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியாகப் பொருந் தச் செய்கிறது. ஏனெனில், உள்ளூர் நிலைமைகள் மிக வும் வேறுபட்டவை. சமீப காலமாக, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து நிதியளிக்கும் இந்தத் திட்டங்களை ஒன்றிய அரசின் திட்டங்கள் என்று முத்திரை குத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.
கூட்டாட்சிக்கு மட்டுமல்ல ஜனநாயகத்துக்கும் விரோதம்
இது நமக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேயிருக்கின்ற மிக முக்கியமான கருத்து முரண்பாடாகும். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று வலி யுறுத்தும் ஒன்றிய அரசின் கருத்துகளுக்கு பல மாநில அரசு கள் ஆட்சேபனைகள் தெரிவித்திருக்கின்றன. ஒன்றிய அர சின் இந்தப்போக்கு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். மாநில அரசாங்கங்களுக்கு அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு செலவிட மாநில அர சாங்கங்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்திட வேண்டும். ஒன்றிய அரசாங்கம் சில பிரிவுகளை முன்னுரிமை உடை யவைகளாகக் கருதினால் அவற்றை அது மாநில அர சாங்கங்களுடன் கலந்து பேசி, பரந்த அளவுகோல்களை வகுக்க முடியும். அதற்குப் பதிலாக அது கடுமையான அளவு கோல்களுடன் திட்டங்களைத் தீட்டி, மாநில அரசாங்கங்கள் ஒன்றிய அரசின் தூதராக செயல்பட வேண்டும் என்று வற் புறுத்துவது, கூட்டாட்சிக் கோட்பாட்டையும், ஜனநாயகத்தின் வேரையும் வெட்டி வீழ்த்திவிடும் ஒன்றிய அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக நாம் நம் குரலை வலுவாக எழுப்பிட வேண்டும்.
ஏழாவது அட்டவணை மாநில பட்டியலிலும் ஊடுருவல்
மேற்கூறியவற்றைத் தவிர, மாநில அரசாங்கங்களின் கீழ் இருந்துவரும் சிறு துறைமுகங்கள், அணை பாது காப்பு மற்றும் கூட்டுறவுத்துறை போன்று அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் உள்ளவற்றிலும் ஒன்றிய அரசு ஊடுருவல்களைச் செய்துள்ளது. வரி வருவாயைப் பொறுத்தவரையில், நாடு முழுவதும் வரி விகிதங்கள் ஒரேமாதிரியானதாக மாற்றப்பட்டுள்ளன. முதலில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT), பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி (GST). இவற்றின் விளைவாக மாநி லங்கள் வரி வருவாயைத் திரட்டுவதற்கு இருந்த இடத்தைக் கணிசமாக இழந்துள்ளன. அவை சொந்த வரி வருவாயைத் திரட்டுவதற்குப் போதுமானதாக இல்லை. ஜிஎஸ்டி அடிப்ப டையில் விகிதப் பகிர்வு மாநிலங்களுக்கு சாதகமற்றதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது.
ஏழைகளுக்கு வழங்கும் நிவாரணத்தை இலவசம் என ஏளனம் செய்கிறது
இயந்திர பற்றாக்குறை இலக்குகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், சமூக மற்றும் பொருளாதாரத் துறை களில் மாநிலங்கள் செய்யும் செலவுகள் பின்னடைவைச் சந்தித்தன. இதனால் ஏழைகளும் சமூகத்தின் ஓரங்கட்டப் பட்ட பிரிவுகளும் சமூகப் பாதுகாப்பை இழக்கும் அபா யத்தை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில், சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளுக்கு மாநிலங்கள் நிவாரணம் வழங்குவதை ‘இலவசங்கள்’ என்று ஏளனமாக அழைக் கப்பட்டது. அதே சமயத்தில் பெரும் பணக்காரர்களின் சம்பாதிக்கப்படாத மற்றும் மரபுரிமையாகப் பெறப்பட்ட வருமானத்தின் மீது லேசான வரி விதிக்கப்பட்டது.
கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் சலுகைகள்
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒன்றிய அரசு பெரும் பணக்காரர்களுக்கும், பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகளை வாரி வழங்கிவரும் அதே சமயத்தில், மாநிலங்களோ பற்றாக்குறை இலக்குகளை அடைவதற்கு ஏற்படும் நிதி ஒருங்கிணைப்புக்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்கிற வாதத்தை ஒன்றிய அளவில் கொள்கை வகிப்பவர்கள் முன்வைக்கின்றனர். 2024ஆம் ஆண்டில் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தில் பொருளாதார வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வில், 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவில் வரு மானம் மற்றும் செல்வப் பங்குகள் முறையே 22.6% மற்றும் 40.1% ஆக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் வருமானப் பங்கில் முதல் 1% இன் பங்கு உலகிலேயே மிக அதிகமாக உள்ளது என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இவ்வாறு சமீப காலத்தில் வருமானம் மற்றும் செல்வத்தின் சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்தான், மாநில அரசாங்கங்கள் ஏழைகளுக்கு அளிக்கப்படும் உதவிகளை இலவசங்கள் என்று கேலி பேசுகின்றனர். இது இவர்களின் ஜனநாயக விரோத உள்ளடக்கத்தை அம்பலப்படுத்துகிறது. மாநில கடன் வரம்புகளில் நியாயமற்ற கட்டுப்பாடுகள் மேலும்,
சிறப்பு நோக்க திட்டங்கள் (Special Purpose Vehicles) மூலம் கடன் வாங்குவதை மாநில அரசுகள் பெறு வதைப் போலவே சேர்க்க அரசமைப்புச்சட்ட விதிகளை இயற்கைக்கு மாறான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம் மாநிலங்களின் கடன் வரம்புகளில் நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசு அதன் நிதிப் பற்றாக்குறையில் அத்தகைய கடன்களைச் சேர்க்கவில்லை என்றபோதிலும், இந்த விதி கேரளா போன்ற மாநிலங்கள் மீது ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்டி ருக்கிறது. இதனால் மாநில அரசுகள் தங்களுக்குத் தேவை யான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மூலதனச் செலவி னங்களைச் செய்யும் திறனைத் தடுக்கிறது. ஒன்றிய அர சாங்கத்தின் இந்த அநியாயமான கூட்டாட்சிக் கோட்பாட் டிற்கு விரோதமான நடவடிக்கையை எதிர்த்து நீதித்துறை யில் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இப்போது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அரசியல் அம்சத்திற்கு வருகிறேன். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சட்டமுன் வடிவுகளை நிறுத்தி வைத்தல் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான நிதி உறவுகளில் இதுதான் நிலைமை என்றால்,
சமீப காலங்களில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கூட்டாட்சி விரோதச் செயல்களையும் நாம் தெளிவாகக் காண்கிறோம். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வடிவுகள் ஆளுநர் மாளிகைகளில் மிக நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படுகின்றன. மாநில சட்டமன்றங்கள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன, மேலும் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் வாக்காளர் களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இந்த ஜனநாயக அமைப்பு களை எந்த சரியான காரணமும் இல்லாமல் தாமதப்படுத்து வதன் மூலமும், சில சமயங்களில் ஒப்புதலை நிறுத்து வதன் மூலமும் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றாமல் வைத்திருப்பது கூட்டாட்சிக் கோட்பாடு, ஜனநாயகம் மற்றும் பிற முக்கியமான அரசமைப்புச்சட்ட விழுமியங்களுக்கு மிகப் பெரிய சவால்களாகும். ஆளுநர்களின் அடாவடியும் நீதிமன்றத்தை நாடும் நிலையும் அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களை நாம் கவ னிக்கும்போது, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் மீது ஆளுநர்களால் பயன்படுத்தக்கூடிய விருப்புரிமை வீட்டோ அதிகாரம் எதுவும் இல்லை என்ப தைத் தெளிவாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. அரச மைப்புச்சட்டத்தில் இவ்வளவு தெளிவாக இருந்தபோதிலும், ஒன்றிய அரசை நடத்தும் கட்சியைத் தவிர பிற கட்சிகளால் ஆளப்படும் பல மாநிலங்கள், சமீப காலங்களில் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையை
எதிர்கொண்டு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. விரிவடையும் பொதுப்பட்டியல் மாநிலத் துறைகளில் ஊடுருவல் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், தொடர்ந்து விரிவடையும் பொதுப் பட்டியல் மாநிலங்களின் சட்டமன்றத் துறையில் ஊடுருவ வழிவகுக்கிறது. விவசாயப் பொருட்களின் விலையைக் குறைப்பது போன்ற கணிச மான வகையில் மாநிலங்களைப் பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தங்களில் ஒன்றிய அரசு நுழையும் போது மாநி லங்களுடன் எந்த ஆலோசனையும் இல்லை என்பதை யும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும். உயர்கல்வித் துறையில் மாநிலங்கள் எதிர்கொள் ளும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு இப்போது நான் வரு கிறேன். தற்போதைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் மீது சங் பரிவாரின் வகுப்புவாதப் பிடியை இறுக்கும் நடவடிக்கைகளுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல மாநில சட்டங்களால் உருவாக்கப்பட்டு மாநில அரசுகளால் கணிசமாக நிதியளிக்கப்படுபவைகளாகும். உயர் கல்வித் துறையில் மாநிலங்களை விலக்க முயற்சி உயர்கல்வியின் ஒருங்கிணைப்பு மற்றும் தர நிர்ணயம் தொடர்பான ஒன்றியப் பட்டியலில் உள்ள விஷயங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்டவை என்பதே அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வெளிப்படுத்திய கருத்துகளாகும். ஆனால் தற்போதைய வரைவு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், துணைவேந்தர்கள் நியமனம் போன்ற பல்கலைக்கழக விஷயங்களில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கையும் அளித்திடாமல் அவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க முயற்சிக்கிறது. மாநில அரசுகள் உயர்கல்வி மையங்களுக்கு கணிச மான நிதியை வழங்குகின்றன. மேலும் அவை தரமான கல்வி வழங்கப்படவும், மதச்சார்பற்ற மதிப்புகள் பாது காக்கப்படவும் மற்றும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்படவும் உறுதி செய்ய வேண்டிய கடமையையும் பெற்றுள்ளன. மாநிலங்கள் இந்தக் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு, ஒதுக்கிவைக்கப்பட்டால், அது ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் ஒருதலைப்பட்சமான அரசியல் மற்றும் வகுப்புவாத விஷயங்களை திணிப்பதை நோக்கமாகக் கொண்ட, கூட்டாட்சிக்கு விரோதமான மற்றும் ஜனநாயக விரோதச் செயலாகும். சட்டமன்ற பதவிக் காலத்தை குறைத்தல் மக்களின் அறிவை அவமதித்தல் இந்தச் சட்டங்கள் கல்வி போன்ற எந்தவொரு துறை யோடு மட்டும் நின்றுவிடவில்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இப்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற அரசமைப்புச்சட்டத் திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. இருப்பினும் அரசமைப்புச்சட்டத் திருத்த சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. மாநில சட்ட மன்றங்களின் பதவிக் காலத்தை மக்களவையின் பதவிக் காலத்துடன் இணைப்பதற்கே இந்த முயற்சி. சட்டமன்றங்க ளுக்கு இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவற்றின் பதவிக்காலம் மக்களவையின் மீதமுள்ள காலத்திற்குக் குறைக்கப்படும். நம் நாட்டில், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்க ளுக்கு வாக்களிப்பதில் வாக்காளர்கள் மிகவும்
விவேக மானவர்கள். அவர்கள் குறுகிய காலத்தில் கணிசமாக மாறு பட்ட முறையில் வாக்களித்துள்ளனர். தேர்தல் செலவினங்க ளைக் கட்டுப்படுத்துவதற்கான வெளிப்படையான கார ணத்தைக் கூறி மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களின் விதிமுறைகளை சீரமைக்க முயற்சிப்பது வாக்காளரின் ஞானத்தை அவமதிப்பதாகும், மேலும் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது ஒற்றைத்தன்மையை (unitarism)த் திணிப்பதற்கான முயற்சியுமாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனை மற்றொரு கவலைக்குரிய உண்மை என்னவென்றால், மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றும் நடவடிக்கை. இது மக்களவையில் வெவ்வேறு மாநிலங்கள் கொண்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை யில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். எல்லை நிர்ணயம், 1976ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையை திறம்படச் செயல்படுத்திய மாநி லங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல், சிந்த னையின்றி செய்யப்பட்டால், மக்கள்தொகை அதிக ரிப்பைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு, மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவப் பங்கை இழப்பதன் மூலம் தண்டனை வழங்குவதற்குச் சமமாகும். கேரளா, தமிழ்நாடு மற்றும் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநி லங்கள் ஏற்கெனவே சந்தித்து இந்த விஷயத்தில் கடுமை யான கவலையை வெளிப்படுத்தியுள்ளன. ஏற்கெனவே, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் கணிசமான நடவடிக்கைகளை எடுத்து மக்கள் தொகையை திறம்படக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், ஒன்றிய அரசின் வரிகளின் பிரிக்கக்கூடிய தொகுப்பில் அவற்றின் பங்கு சுருங்கி வரும் சூழ்நிலையில் உள்ளன. இப்போது, இந்த மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குறைந்த பிரதிநிதித்துவத்திற்கான சாத்தியத்தை எதிர்கொள்கின்றன. மாநிலங்களுக்கு இடையேயான நிதி மற்றும் அரசியல் நலன்களை சமநிலைப்படுத்துவது ஆரோக்கியமான மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் இணக்கமான மத்திய-மாநில உறவுகளுக்கு அவசியமான நிபந்தனை யாகும். மத அடிப்படையில் குடியுரிமையை கட்டாயப்படுத்தல் மிகப் பெரிய சவால் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு மதத்தின் அடிப்படை யில் குடியுரிமை வழங்க முயற்சிப்பது, நாட்டின் மதச்சார் பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இத னைச் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்தும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மற்றொரு செயல் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு மிகப் பெரிய சவாலாகும். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்க ளைப் பாதுகாக்கும் முயற்சியில் கேரளா இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
மாநிலங்கள், உள்ளாட்சிகளின் உரிமைகளை பாதுகாத்தல் நிறைவாக, இந்தியாவில் ஒன்றிய அரசு – மாநில அரசு களின் உறவுகள், சமீபத்திய சில அரசியல் நடவடிக்கை களால் கணிசமாக சமச்சீரற்றதாக மாற்றப்பட்டுள்ளன என்ப தைக் கூற விரும்புகிறேன். இவை ஏற்கனவே பலவீனமாக இருக்கும் கூட்டாட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்து கின்றன. மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், மையப்படுத்தல் போக்கு களின் உந்துதலைக் கூட்டுவதைத் தடுப்பதும் ஜனநாயகம் மற்றும் சிவில் சுதந்திரங்களைப் பாதுகாக்க முற்றிலும் அவசியமாகும். சமச்சீர் உறவுகள் பிரச்சாரத் திட்டம் கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சிநிரல் மற்றும் பெரும் பான்மை மதவெறி சக்திகளால் ஆதரிக்கப்படும் எதேச்சதி காரப் போக்குகளுக்கு எதிராக நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டும்
வகுப்புவாத மற்றும் எதேச்சதிகார சக்திகளின் தாக்குதல்களுக்கு எதிரான நமது பிரச்சா ரத்தில், ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடை யிலான சமச்சீர் உறவுகளை ஒரு முக்கியமான திட்டமாக நாம் சேர்க்க வேண்டும். இதுபோன்ற விவாதங்களும், கருத்தரங்கங்களும் இந்தப் பொருத்தமான பிரச்சனைகளை பொது மக்க ளின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும், அரச மைப்புச்சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் உத விடும் என்று நான் நம்புகிறேன். தமிழில்: ச.வீரமணி