கோயம்புத்தூர், பிப். 10- டாஸ்மாக் நிர்வாகத்தின் முறை கேடுகளை கண்டித்து, முறையாக அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் ஊழல் நடவடிக்கைகளை கண்டித்தும், அனுமதியற்ற பார்களில் நடைபெறும் மதுவிற்பனையை தடுப்பதாக மதுக்கடைகளில் புகுந்து அமைச்சர் பெயரை பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் பார்ஈஸ்வரமூர்த்தி, திலக், விக்கி, உமாசங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்
என வலி யுறுத்தியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் எனக் கோரியும், டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி தினசரி மாமூல் கேட்பது, உடன்படாத ஊழி யர்களை அதிகாரிகளின் துணை யோடு பணியிடமாற்றம் செய்வது போன்ற அதிகார அத்து மீறலை கண்டி த்தும், தமிழ்நாடு அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சமூக விரோதிகள், டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு டாஸ்மாக் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.திருச் செல்வன் மற்றும் கூட்டமைப்பின் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம் முழு வதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை, உங்களை கைது செய்கிறோம் என்ற னர். முன்கூட்டியே அனுமதி பெற்று, ஒலிபெருக்கி அமைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் திட்டமிட்டே போலீசார் ஆர்ப்பாட்ட த்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க பொதுச்செயலாளர் க.திருச்செல்வன் பேசுகையில், கரூர் கும்பலிடம் இருந்து டாஸ்மாக் ஊழியருக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி அவப்பெயரை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இயக்கம் நடத்தினால், சமூக விரோதி களைதான் நாங்கள் பாதுகாப்போம், உங்களை கைது செய்வோம் என கோவை போலீசார் சொல்வது விந்தையாக இருக்கிறது எனக் கண்டனம் தெரிவித்தார். சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் ஜான்அந்தோணி ராஜ், பாட்டாளி தொழிற்சங்கம் வடி வேல் ராவணன், ஏடிபி கமலக் கண்ணன், ஏஐசிசிடியு வெங்கடாச் சலம், அரசு பணியாளர் சங்கம் உ.மா.செல்வராசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கைதாகினர்.