tamilnadu

img

மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு

சென்னை,பிப்.13- இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக  அரசுக்கு சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாநில மாநாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநில மாநாடு ஞாயிறன்று(பிப்.12)  சென்னை சூளைமேட்டில் நடை பெற்றது. பொருளாதார நிபுணர்  பேராசிரியர் ஆத்ரேயா, ஐப்சோவின்  முதுபெரும் தலைவர் க.முத்தியாலு ஆகியோர் தலைமை தாங்கினர். ஐப்சோ தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர், பா. செந்தில்குமார் வரவேற்றார். ஐப்சோ அகில இந்தியப் பொதுச்  செயலாளர் ஆர். அருண்குமார்  மாநாட்டை துவக்கி வைத்தார். அகில  இந்திய துணைச் செயலாளர் தோழர் ஹர்சந்த் சிங் சிறப்புரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில துணைச் செயலாளர் மு.வீர பாண்டியன் நிறைவுரையாற்றினார். ஆ. கோபண்ணா (காங்கிரஸ்), நா.எழிழன் (திமுக) எம்.எல்.ஏ, ஜோசப்ராஜா (ஆம்.ஆத்மி),  அந்திரிதாஸ் (மதிமுக), பழ.ஆசைத் தம்பி, (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), முஸ்தபா (தமுமுக) எஸ்.பாஸ் கரன் (ஐக்கிய கம்யூனிஸ்ட்), வி.எஸ். நவமணி(பார்வர்டு பிளாக்) உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னர். ஐப்சோ தமிழ்நாடு மாநில  பொதுச் செயலாளர் ஐ.ஆறுமுக நயினார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.இர வீந்திரநாத் கொள்கை அறிக் கையை முன் வைத்தார். மாநிலப் பொருளாளர் ஆர்.ராஜேந்திரன் நன்றி நவின்றார். 

தீர்மானம்

ரஷ்ய - உக்ரைன் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு  காண வேண்டும், போரை நிறுத்த  வேண்டும், இந்தியாவின் மதச்சார் பின்மை, ஜனநாயகம், அரசியல்  சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு  செயல்படுவது கண்டனத்திற்குரி யது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நிர்வாகிகள்

மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திர நாத், ஐ.ஆறுமுகநயினார், மருத்து வர் நா. எழிலன் எம்.எல்.ஏ, பொன். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுச்  செயலாளர்களாகவும், முத்தியாலு, பேராசிரியர் ஆத்ரேயா, ஜி. முரளி,  மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, கோபிக் குமார் உள்ளிட்டோர் தலைவர்க ளாகவும், ஆ. கோபண்ணா, உ. பலராமன், கே. சுப்பராயன் எம்.பி,  சு.வெங்கடேசன் எம்.பி, ரவிக்குமார்  எம்.பி , விருதுநகர் பாலச்சந்திரன் ஆகியோர் கவுரவத் தலைவர்க ளாகவும், ராஜேந்திரன் பொருளா ளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  நிர்வாகிகள் உட்பட 31 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும், 91 பேர்  கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.