tamilnadu

கார் தீபிடித்து எரிந்ததில் உரிமையாளர் பலி...

விருதுநகர்:
விருதுநகர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த  கார் தீப்பிடித்து எரிந்ததில் டிராவல்ஸ் உரிமையாளர்உடல் கருகி பலியாகினார்.விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் (33). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் புதன் கிழமை  அதிகாலை 1 மணியளவில்  குருநாதன் தனதுகாரில் மதுரைக்கு புறப்பட்டார்.எரிச்சநத்தம் சாலையில் கார் வந்த போது திடீரெனஉள்ளேயிருந்து கரும்புகை வெளியானது. இதனைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குருநாதன் உடனே காரில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் கார் கதவை திறக்க முடியவில்லை. ஒருபுறம் அவர் கதவை உடைத்து திறக்க முயன்ற போதும் முடியவில்லை.  அப்போது,  குருநாதன் செல்போன் மூலம் தனது தந்தைமுனியாண்டியிடம் காருக்குள் சிக்கியிருப்பதாக தெரிவித்தாராம். இதையடுத்து,முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;