சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை
அமித் ஷா பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதிலடி
சென்னை, மே 5 - ‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்ப டையாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று அன்பில் மகேஸ் தெரி வித்துள்ளார். தில்லியில் 1008 சமஸ்கிருத உரை யாடல் அமர்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, கால னித்துவ ஆட்சிக்கு முன்பு சமஸ்கிரு தத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமர் மோடியின் தலை மையிலான ஆட்சியில் சமஸ்கிருதத் தின் மறுமலர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது, அதன் மறுமலர்ச்சிக் கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கானது என்று கூறிய அமித் ஷா, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ் கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக் கிறது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இதைத்தான் நாங்களும் வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிரு தத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்க ளுக்கு வேண்டாம் என்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக் கிறது” என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா. இதைத்தான் நாங்களும் தெரி வித்து வருகிறோம். “வர்ணா சிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ் கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.