tamilnadu

வரலாற்று ஆவணங்களும் தனியாருக்கு விற்பனை

புதுதில்லி, அக்.16- லாபம் தரும் நாட்டின் பொதுத்துறை நிறு வனங்களை, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி விலையில் விற்று வரும் மோடி அரசு, அடுத்த ஒன்றை விற்க முடிவு செய்துள்ளது.   நாட்டின் பொக்கிஷமான நூறு ஆண்டுகால  வரலாற்று ஆவணங் களை  தனியார் தொலைக்காட்சிகளுக்கு  விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்திய சுதந்திர போராட்டங்கள், குடிய ரசுக்கு முந்தைய நாடாளுமன்ற விவா தங்கள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய ஆவணங்களை ஏலம் விட்டு வருவாய் ஈட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன் மூலம் அரசு தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் முக்கிய ஆவணங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும் என்று பிரச்சார் பாரதியின் தலைவர் சசிசேகர் கூறியுள்ளார்.

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி இந்தி யாவின் 100 ஆண்டுகால முக்கிய வரலாற்று காட்சி மற்றும் ஒலி வடிவிலான பல்லாயி ரம் ஆவணங்கள் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியிடம் பாதுகாப்பாக உள்ளன. மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வு கள், 1946 முதலான முக்கிய நாடாளுமன்ற நிகழ்வுகள் என்று பல முக்கிய ஆவணங்கள் பிரச்சார் பாரதியின் கட்டுப்பாட்டில் உள் ளன. இந்திய அரசின் கைவசமுள்ள மிக அரி தான இந்த ஆடியோ, வீடியோ ஆவ ணங்களை இரண்டாகப் பிரித்து ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் கான வகுக்கப்பட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை அறிவிப்பாணை யாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பல முன்னணி தொலைக்காட்சி நிறு வனங்கள், ஓ.டி.டி நிறுவனங்கள் இவற்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரச்சார் பாரதியின் தலைவர் சசிசேகர் தெரி வித்துள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாச மாக செயலாற்றி வரும் மோடி அரசின் இந்நட வடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

;