சென்னை, அக். 19 - ஆளுநர்களை நீக்கும் அதி காரத்தை சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும். அதற்காக வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என்று மூத்த வழக் கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள் - அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங் கள்...’ எனும் நூல் வெளியீட்டு விழா புதனன்று (அக்.18) சென்னையில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.சக்தி குமார் வெளியிட, மூத்த வழக் கறிஞர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் பேசுகையில், “சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு மட்டுமே ஆளு நருக்கு அதிகாரம் உள்ளது. அரசின் தீர்மானங்களில் கையெழுத்திடுவதை தவிர அவருக்கு வேறு எந்த அதி காரத்தையும் அரசமைப்புச் சட்டம் வழங்கவில்லை. ஆனால் ஆளுநர்கள் அரச மைப்பு சட்டத்தை மீறி செயல் படுகின்றனர். கட்சித் தாவல் பிரச்சனை களில் சட்டமன்றப் பேரவை தலைவர்களும் விதிகளை மீறி செயல்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் பேரவைத் தலைவர்களுக்கு உச்சநீதிமன்றமும் முடி வெடுக்க காலஅவகாசம் தந்து கொண்டே இருக்கிறது. நீதித்துறை வலுவாகவும், சரியாகவும் இருந்தால்தான் ஜனநாயகம் நீடித்து நிலைக் கும்” என்றார்.
“வரியை உயர்த்தினால் மட்டுமே அது நிதி மசோதா. வரியை குறைத்தால் கூட அது நிதி மசோதா அல்ல. ஆனால், ஆதார் முறை, அம லாக்கத்துறை; அரசமைப்புச் சட்ட திருத்தங்களை நிதி மசோதா என்ற பெயரில் நிறை வேற்றுவது விதிமீறல். குடியரசு தலைவர், ஆளுநர் பற்றி அரசமைப்பு சட்ட நிர்ணய அவையில் நடந்த விவாதங்களுக்கு மாறாக தற் போது நடந்து கொள்கின்றனர். பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர், பட்டம் வழங்கலாமே தவிர, நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட முடியாது. மாநில அரசுக்கு உட்பட்டுதான் ஆளு நர் செயல்பட வேண்டும். இதை நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் ஆளுநர்கள் மீறி செயல்படுகின்றனர். வழக்கு ரைஞர்கள் அமைதி காத்தால் இத்தகைய சட்டமீறல்கள் நிகழத்தான் செய்யும். வழக் கறிஞர்கள்தான் மக்களை அணி திரட்ட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
கி.வீரமணி
நிகழ்வில் சிறப்புரையாற் றிய திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய ஆட்சியாளர்களால் பகிரங்கமாக மீறப்படுகிறது. நாடாளுமன்றத்தை கொச் சைப்படுத்தும் வகையில், விவாதங்களின்றி அரசியல மைப்புச் சட்டத்தை திருத்து கின்றனர். நிதி மசோதா (மணி பில்) என்ற பெயரில் பல விஷ யங்களை தந்திரமாக சட்ட மாக்குகின்றனர். அத்தகைய சட்டங்களின் மீதான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிரண்டு விசார ணைக்கு வந்துள்ளது. தீர்ப்பு எப்படி வரும் என்று தெரிய வில்லை. ஆனால், மக்களின் தீர்ப்பு தேர்தலில் சரியாக வரும். இந்த புத்தகம் அறிவு சார் போர்க்கருவியாக, கருத்தி யல் களத்தில் களமாடும் பேராயுதமாக வந்துள்ளது” என்றார். சிகரம் ச.செந்தில்நாதன் நூலாசிரியர் சிகரம் ச.செந் தில்நாதன் ஏற்புரையில், “குடியரசு தலைவர், உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி களை ‘குற்றச்சாட்டு’ (இம்பீச் மெண்ட்) கூறி, நாடாளுமன்ற தீர்மானத்தின் வாயிலாக நீக்க முடியும். ஆனால், ஆளுநர் களை நீக்க எந்த வழிமுறை யும் இல்லை. எனவே, இஷ்டத்திற்கு செயல்படு கின்றனர். எதைஎதையோ மாற்றும் ஒன்றிய அரசு, முகலாயர்கள் அறிமுகப் படுத்திய ஆளுநர் பதவி முறையை ஒழிக்க மறுப்பது ஏன்? இம்பீச்மெண்ட் கொண்டு வந்து ஆளுநர்களை நீக்கும் அதிகாரம் சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான போராட்டங்களை வழக்குரை ஞர்கள் முன்னெடுக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் வழக்குரை ஞர்கள் பு.பா.சுரேஷ்பாபு, எஸ்.ரவி, டி.ஆர்.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.