கோழிக்கோடு, ஜுன் 28- தேசிய இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் பாரம்பரியத்தை எந்தக் கட்சியும் தனியாக உரிமை கொண்டாட முடியாது என்று என் சி பி கேரள மாநிலத் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். என்சிபி-யும் ஏசி சண்முகதாஸ் ஆய்வு மையமும் ஏற்பாடு செய்திருந்த சி.கே.கோவிந்தன் நாயர், ஏ.சி.சண்முகதாஸ் நினைவேந்தல் நிகழ்வை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசுகையி்ல், தேசிய இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளிலும் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் உள்ளனர் என்றார். இஎம்எஸ் அரசுக்கு எதிராக நடந்த விமோசன சமரத்தை (விடுதலைப் போராட்டம்) எதிர்த்து சி.கே.கோவிந்தன் நாயர் வலுவாக எழுப்பிய முழக்கத்தை அரசியல் கேரளா மறக்காது என்றார் சாக்கோ. சண்முகதாஸ் விருதை முன்னாள் எம்பி சி.ஹரிதாசுக்கு அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் வழங்கினார்.