tamilnadu

img

சிபிஐ(எம்) எழுச்சியை பறைசாற்றிய கொல்லம் மாநாடு

சிபிஐ(எம்) எழுச்சியை பறைசாற்றிய கொல்லம் மாநாடு

கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற சிபிஐ(எம்) 24ஆவது மாநில மாநாட்டின் நிறைவில், மார்ச் 9 அன்று நகரம் முழுவதும் சிவப்பு அலையாக மாறியது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் சீத்தாராம் யெச்சூரி நகரில் உள்ள ஆஸ்ரம் மைதானத்தில் திரண்டனர். 25,000 புரட்சியாளர்கள் கொண்ட செந்தொண்டர் படை - குழந்தைகள், இளம்பெண்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் -  அணிவகுத்துச் சென்றனர். 18 பகுதிகளில் இருந்து 166 உள்ளூர் குழுக்களின் தன்னார்வலர்கள் தெருக்களை நிரப்பினர். செந்தொண்டர் படையின் வணக்கத்தைப் பெற்ற பின், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு அமைந்தது.