கே.வரதராசன் நகர் (திருச்சூர்), டிச.14- வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு ஒழிக்க முயல்கிறது என்று விவ சாயத் தொழிலாளர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் கூறினார். திருச்சூரில் செவ்வாயன்று துவங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்தி அவர் மேலும் பேசியதாவது: நமது நாட்டில் உள்ள விவசாயிகள் தற்போது சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளில் வலுவான போராட்டங்களை நடத்திய உன்னத மான அனுபவங்களோடு இந்த மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்துகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விளைபொருள் உற்பத்திக்கு ஆகும் செலவுடன் கூடுதலாக பாதி அளவு அதிகரித்து விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை. இந்த பரிந்துரையின்படி விவசாய விளைபொருட்களுக்கு விலை வழங்கப்பட வில்லை. பயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயத்திற்கு உதவி இல்லை.
உழவர் காப்பீட்டு திட்டமும் முறையாக செயல்படுத்தப் படவில்லை. 12 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்தன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவ சாய நிலங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளன. கேரளாவில் இ.எம்.எஸ் அரசு செயல்படுத்திய நிலச் சீர்திரு த்தச் சட்டம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. மற்ற மாநிலங்களில் நிலப் பிரச்சனை கள் அதிகம். இதற்கு தீர்வுகாண மோடி தயா ராக இல்லை. மோடி அரசின் தீவிர வகுப்பு வாத-கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் கள் ஒருங்கிணைந்த மாபெரும் போராட்டத் திற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக் கான ஏழைகளுக்கு நிவாரணமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு ஒழிக்க முயல்கிறது.
இத்திட்டத் தில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கப்படு வதில்லை என அவர் தெரிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லேயும் வாழ்த்திப் பேசினார். எஸ்கேஎம் தலைவர்கள் செவ்வாயன்று மாலை சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைவர்கள் ராகேஷ் சிங் திகாயத், அதுல்குமார் அஞ்சான், ராஜாராம்சிங் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது அவர்கள் தில்லியை முற்றுகையிட்ட விவசாயி கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டிய கட்டா யத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.