இந்திய அரசியல்வாதிகளிலேயே மிக அதிகமாக எல்லையில்லாமல் பொய் பேசுபவர்கள் பா.ஜ.க. தலைவர்கள்தான்! அதில் முதன்மை இடத்தை வகிப்பது பிரதமர் மோடிதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. “வாயால் வடை சுடுவது” எனும் புதிய சொலவடையையே மக்கள் உருவாக்கும் அளவுக்கு பொய்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2022க்குள் எதையெல்லாம் சாதிப்போம் என மோடி சொன்னதும் உண்மையில் என்ன நடந்துள்ளது என்பது குறித்தும் சில முக்கிய விவரங்கள் (அட்டவணையில்)
வாக்குறுதி தராமலேயே மோடி அரசாங்கம் செய்த சில ‘மகத்தான’ காரியங்களும் உண்டு
* கறுப்பு பணம் ஒழியும்/ பயங்கரவாதம் செய லற்றுப் போகும்/ ஊழல் ஒழியும் என்றெல்லாம் இலக்கு என கூறப்பட்டு பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. இவற்றில் எதுவும் நடக்கவில்லை. ரொக்கப்பணம் புழங்குவது குறையும் என்பதே இலக்கு என நோக்கத்தை மாற்றினர். அதுவும் நடக்கவில்லை. ரொக்கப்பணம் புழங்குவது அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கியே கூறுகிறது.
* ஜி.எஸ்.டி.குழப்பங்கள் மூலம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாறு மாறாக உயர்வு; மாநிலங்களின் வரி மாற்ற அதிகாரங்கள் பறிப்பு. * பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி/ பல லட்சம் கோடி வரிச்சலுகைகள்/ வருமான வரி விகிதம் கணிசமாக குறைப்பு.
* ரூ. 8000 கோடியும் அதற்கு அதிகமாகவும் சொத்து சேர்த்துள்ள டாலர் பில்லியனர் பணக்காரர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு. வெறும் 142 பேராக உள்ள இவர்களது மொத்த சொத்து ரூ.30 லட்சம் கோடிக்கும் அதிகம்! * 2021ஆம் ஆண்டு மட்டும் அதானி சுமார் ரூ. 6,39,200 கோடி கூடுதலாக சொத்து சேர்த்தார். அதாவது ஒரு நாளைக்கு ரூ. 1750 கோடி சேர்த்துள்ளார்.
* மறுபுறத்தில் 2 டாலருக்கும் குறைவாக அதாவது சுமார் ரூ.160 க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் இந்திய மக்களின் எண்ணிக்கை 22% அதாவது சுமார் 30 கோடிபேர் என ஐ.நா. விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
* ஆட்சியில் இருந்த 8 ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.59லிருந்து ரூ.82 ஆக வீழ்ச்சி அடையச்செய்த பெருமை மோடி அரசுக்கு உண்டு.
* மோடி ஆட்சியில் மட்டும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் மூலம் ரூ. 18.23 லட்சம் கோடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
* உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யா, விலை குறைவாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொடுத்தும் இங்கு விலை குறைக்கப்பட வில்லை. மாறாக அம்பானி போன்ற சில தனி யார் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய்யை விலை குறைவாக வாங்கி சுத்திகரித்து பெரும் லாபத்து க்கு வெளி நாடுகளுக்கு விற்றுள்ளனர். அதன் மூலம் பெரும் கொள்ளை அடித்துள்ளனர்.
இப்படி பொருளாதாரத்தை சிதைத்த மோடி அரசாங்கம் 2022க்குள் நிறைவேற்றுவோம் என சொன்ன பல வாக்குறுதிகள் கிடப்பில் உள்ளன. பொருளாதாரம் மட்டுமே தேர்தல் பிரச்சனையாக முன்வந்தால் பா.ஜ.க. எந்த மாநிலத்திலும் மட்டுமல்ல; நாடாளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற இயலாது. இதனை மோடி- அமித்ஷா கூட்டணி நன்கு அறிந்துள்ளது. எனவேதான் மதவெறியைக் கூர்மைப்படுத்துகிறது. 2024 தேர்தல்களை நோக்கி தேசம் நகரும் பொழுது மதவாத பிளவு கருத்துகளும் களத்தில் கலவரங்களும் அதிகமாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனினும் எல்லா சமயங்களிலும் மதவாதிகளுக்கு இது கை கொடுக்காது!
மோடி சொன்னது
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயரும். 3 டிரில்லியனை தாண்டவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம்
25 டிரில்லியன்- சீனா 20 டிரில்லியன்.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2017-2021 ஆண்டுகளுக்கு இடையே 1.6% குறைந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடிலிருந்து இந்தியா முற்றிலும் 121 தேசங்களை உள்ளடக்கிய சர்வதேச பசி/பட்டினி குறியீடு
விடுதலை பெறும். பட்டியலில் இந்தியா மிக மோசமாக 107வது இடத்தில்!
டிஜிட்டல் அறிவு” அனைவருக்கும் உத்தரவாதம் செய்யப்படும். 66% பள்ளிகளுக்கு இணைய வசதி இல்லை. 55%
பள்ளிகளுக்கு செயல்படும் கணினிகள் இல்லை.
ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமான வீடு வழங்கப்படும். 17.7 லட்சம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர் என அரசின் அறிக்கையே கூறுகிறது. மேலும் 10 கோடி பேர் அடிப்படை வசதிகள் இல்லாத
குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர்.
புல்லட் ரயில்கள் முழுமையாக ஓடத்துவங்கும். இன்றுவரை நடக்கவில்லை. சீனாவில் 40,000 கி.மீ. நீளத்துக்கு புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்பொழுது வேகம் மணிக்கு 600 கி.மீ.
என உயர்த்தப்பட உள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் இது நடக்கவில்லை. தனி நபர் சராசரி மின் பயன்பாடு/
உத்தரவாதம் செய்யப்படும். யூனிட்டுகள்: அமெரிக்கா-12,154/ரஷ்யா-6685/ சீனா-5885/
பிரேசில்-2830/ இந்தியா-1208/ உலக சராசரி-3081 விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். கனவு நனவாகவில்லை. 2024க்கு முன்பு சாத்தியமில்லை.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்வசதி உத்தரவாதம் செய்யப்படும். லட்சக்கணக்கான வீடுகளுக்கு இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை.
கிராமப்புறங்களில் 52% வீடுகளுக்கு மட்டும்தான் குடிநீர்வசதி உள்ளது. 80% இந்தியர்கள் மாசுபட்ட குடிநீரை பயன்படுத்துகின்றனர்
என அரசின் அறிக்கையே கூறுகிறது.
திறந்த வெளி கழிப்பிடங்கள் முற்றிலுமாக அகற்றப்படும். இந்திய மக்களில் 45% பேர் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். 1லட்சம் கழிவறைகள் வீடுகளுக்கு கட்டப்பட்டதாக கணக்கு வெறும் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது. கட்டப்பட்ட பல கழிவறைகளுக்கு தண்ணீர்வசதி இல்லாத காரணத்தால் பயன்படுத்தப்படாமல் சீரழிகின்றன.
பாரத்மாலா பரியோஜனா எனும் நெடுஞ்சாலை வசதிகள் 25% பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. இப்பொழுது மூலம் 28,000 கி.மீ. சாலைகள் வாயிலாக 550 மாவட்டங்கள் புதிய இலக்கு-2028 ஆம் ஆண்டு.
இணைக்கப்படும்.
ஆலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 12 முதல் 14%வரை உயர்த்தப்படும். 6%ஐ தாண்டவில்லை.ஜி.டி.பி.யில் தொழில் உற்பத்தியின் பங்கு 25% ஆக உயர்த்தப்படும். 16%ல் தேங்கியுள்ளது.
2022க்குள் 10 கோடி பேருக்கு வேலை. 2020-2022 கால கட்டத்தில் 1.40 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
இதில் 45 லட்சம் ஆண்கள். 95 லட்சம் பெண்கள்.ஜி.டி.பி. வளர்ச்சி 9 முதல் 10% சாதிக்கப்படும். 5 முதல் 6%ஐ தாண்டவில்லை.அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அகண்ட 50% கிராமங்களுக்கு கூட இல்லை.
அலைவரிசை இணையம் வழங்கப்படும்.தெலுங்கானாவுக்கு காசிபேட்டையில் ரயில் பெட்டி தொழிற்சாலை/ இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே பிரதமர் தெலுங்கானா
துணி உற்பத்தி பூங்கா/பய்யாரம் இரும்பு தொழிற்சாலை/ வரும் பொழுது மக்கள் “வாக்குறுதி என்ன ஆயிற்று?” என சுவரொட்டிகள் பாதுகாப்பு ஆயுத உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும். மூலமும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமும் கேட்கின்றனர்.பீகாருக்கு விசேட அந்தஸ்து/ ரூ. 1.25 லட்சம் கோடி பொருளாதார உதவி/ சர்க்கரை தொழிற்சாலைகள். எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
2022க்குள் 500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்து உலகம் 250 கோடிக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முழுவதும் தருவோம் என 2021ஆம் ஆண்டு ஜி20 சுமார் 16 கோடி மட்டுமே பிறநாடுகளுக்கு தரப்பட்டுள்ளன.மாநாட்டில் வாக்குறுதி.தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை. கட்டிட வேலைகள் கூட துவங்கப்படவில்லை.
சென்னை-ஒசூர்-சேலம்-கோவை-திருச்சி நகரங்களை இணைத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மண்டலம் உருவாக்கப்படும்.
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைதுகளும் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன.
துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய முதலீட்டாளர்களை 2022ல் மட்டும் சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள்
இந்தியாவுக்கு வரவழைப்போம். இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.