சென்னை.அக்,26- தமிழகத்தின் முதலாவது மின்சார ஆட்டோ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி, கொச்சி, அகமாதபாத்,பெங்களூரு, அகர்தலா உள்ளிட்ட நகரங்க ளில் இந்த ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பியாஜியோ வாகன நிறுவ னம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய மின்சார ஆட்டோவில் உள்ள மின்கலத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கிலோ மீட்டர் வரை இயக்கமுடியும். வீடுகளில் உள்ள மின்சாரத்தை கொண்டு சார்ஜ் செய்துகொள்வதால் மின்சார கட்டணம் மிக குறை வாக இருக்கும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நாள்தோறும் நல்ல வருவாய் ஈட்டமுடியும் என்றும் பியாஜியோ துணைத்தலைவர் அமித் சாகர் கூறினார். 5 ஆண்டு உத்தரவாதம், இருப்பிடத்தை அறிய நவீன தகவல்தொடர்பு வசதிகள். உரிமையாளர்களுக்கு மொபைல் செயலியில் புதிய அம்சங்கள், வாடிக்கையாளர்கள் வசதியாக அமர அகலமான இருக்கைகள் உள்ளிட்டவற்றை இந்த புதிய ஆட்டோ கொண்டுள்ளது. இதன் விலை ரூ.3.75 லட்சம் ஆகும். சென்னை போன்ற மாசு அதிகமாக உள்ள நகரங்களில் மின்சாரத் தில் இயங்கும் ஆட்டோ போன்ற வாகனங்களை அறிமுகப்படுத் துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த னர்.