சென்னை,ஜூலை 22- கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளியன்று (ஜூலை 22) மீண்டும் பணிகளை தொடங்கி னார். நிதித்துறை மற்றும் செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் குறித்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியினால் பரிசோ தனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்னதாக, அங்கி ருந்து சென்னை தலைமைச்செயல கத்துக்குச் சென்று, குடியரசுத்தலைவர் தேர்தலில், முதலமைச்சர் முதல் நபராக வாக்களித்தார். அதன்தொடர்ச் சியாக வீட்டில் இருந்தபடியே பணி களை கவனித்து வந்த முதலமைச்சர், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் அமைச்சர்கள், அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஜூலை 22) சென்னை தலைமைச்செயல கத்துக்கு வருகை தந்து நிதித்துறை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.