சென்னை, ஆக. 9 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4வது மாநில பொது மாநாடு செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்.19 ஆம் தேதி பங்கேற்று உரையாற்றுகிறார். இதனை முதல்வர் அலுவலகம் உறு திப்படுத்தியுள்ளதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலை வர் பா.ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20,000 மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சரை வரவேற்க காத் திருப்பதாகவும் அவர்கள் இருவரும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள னர்.