tamilnadu

img

செப்டம்பர் 20 : சிந்துவெளி நாள் - ச.தமிழ்ச்செல்வன்

திருவாரூர்,செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பின ரும், விவசாயத்தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டத்தலைவரும், மக்கள் பாடக ருமான தோழர் ஆர்.குமாரராஜா (வயது 45) செப்டம்பர் 18 புதனன்று கால மானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயத்தொழி லாளர் சங்கத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம், இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த தோழர் குமாரராஜா கட்சி அறிவித்த  பல்வேறு போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியவர். கட்சி மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் தனது  வெண்கலக் குரலால் பாடி அனை வரையும் கவர்ந்தவர்.  அவரது மறைவுக்கு செவ்வஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் இருள்நீக்கி கிராமத்தில்  உள்ள அவரின் இல்லத்தில் நடந்தது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர முர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை  வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் ஏ.லாசர், மாநிலத் தலைவரும் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாநில பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரி முத்து,  சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டச்  செயலாளர் வி.மாரிமுத்து, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன்  விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செய லாளர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டி யன், சிபிஎம்  மூத்த தோழர்கள்  ஏ.கே.கணேசன், எஸ்.தங்கராசு மற்றும் வர்க்க வெகுஜன அரங்க நிர்வாகிகள் இரங்கல் உரையாற்றினர்.

எம்.பி.,எம்எல்ஏ அஞ்சலி

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி.மாலி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மற்றும் மாவட்டசெயற்குழு உறுப் பினர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், பொதுமக்கள், கட்சி தோழர்கள் என  ஏராளமானோர் அவர உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வியாழக் கிழமையன்று மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவருமான பெ.சண்முகம், பொதுச்செயலாளர் சாமி.  நடராஜன்  மற்றும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், கே.சாமுவேல்ராஜ், செ.முத்துக் கண்ணன், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.வேல்முருகன், பி.டில்லிபாபு, மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், தஞ்சை கோ.நீலமேகம், ஜி.ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள்  எஸ்.ஜி.ரமேஷ்பாபு, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்பட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.