tamilnadu

img

வீணரை மிதித்திடு! - முனைவர் இரா.செந்தில்குமார்

-  

காலத்தைக் கொல்லும் கைப்பேசி-உன்
      கற்பனை அழிக்கும் அதையோசி!
வேலையைக் கெடுக்கும் கைப்பேசி-அதை
        விட்டிட   வேண்டும் மனங்கூசி!

வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்திடாதே-நீ
       வருமுன் காப்பதில் தாழ்ந்திடாதே!
தாழ்ந்தசெயல் செய்ய ஆழ்ந்திடாதே-உன்
      தகுதியில் குறைந்து வாழ்ந்திடாதே!

அன்பாலே வையம்அணைத்திடுவாய்-உன்
      அறிவினில்  ஆக்கம் பிணைத்திடுவாய்!
உண்மையை உயிராய் நினைத்திடுவாய்!- அதில்
        ஓராயிரம் சொற்கள் இணைத்திடுவாய்!

பெரியோரை மதித்துப் போற்றிடுவாய்-நீ
        பேரும் புகழும் பெற்றிடுவாய்!
சிறியாரை இகழ்ந்து தூற்றிடுவாய்!-நீ
         சிறந்திட  நல்வழி கற்றிடுவாய்!

பெற்றோரின் சொல்லை மதித்திடுவாய்-அவர்
       பேர்பெற  வாழ்வைப் பதித்திடுவாய்!
கற்றோரின் வாய்ச்சொல் துதித்திடுவாய்-வீணர்
         காட்டிடும் செயலை மிதித்திடுவாய்!