சென்னை, பிப்.16- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சா ரம் வியாழனன்று மாலையுடன் நிறைவு பெறு வதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்த லில் போட்டியிடுவதற்காக 57,778 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட வாரியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாக்குச்சேகரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதால், பொதுமக்களை சந்திப்பதில் வேட்பாளர் கள், தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சார நேரம் முடிந்தபின் வார்டுகளுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்தந்த வார்டுகளை விட்டு வெளியேற வும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது.