tamilnadu

img

அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று முற்றுகைப் போராட்டம் வாபஸ்!

அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று முற்றுகைப் போராட்டம் வாபஸ்!

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு

சென்னை, ஏப். 23 - சமூகநலத்துறை அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று, தொடர் முற்றுகைப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது. ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6  ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 15 ஆயிரம்  என உயர்த்த வேண்டும்; உதவித்தொகை  கோரியவர்கள், ஏற்கெனவே வழங்கப் பட்ட உதவித்தொகை நிறுத்தப்பட்டவர் களுக்கு மீண்டும் வழங்க வேண்டும், வயது நிர்ணயித்து உதவித்தொகையை மறுக்கக் கூடாது; 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.22) தொடர் கோட்டை  முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் அழைப்பு விடுத்தது. அடக்குமுறை; கைது! இந்தப் போராட்டத்தைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளி களை ஆங்காங்கே காவல்துறையினர் கைது செய்தனர். தலைவர்களை வீட்டுக் காவல் வைத்தனர். இதனையும் மீறி  சென்னையில் திரண்ட ஆயிரக்கணக்கா னோரையும், காவல்துறையினர், வலுக் கட்டாயமாக கைது செய்து, 20-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இதனால் பலர் மயக்க முற்றனர்.  எனினும், மாலையில் ‘விடுவித்து விட்டோம்’ என காவல்துறையினர் அறி வித்தபோதும், கோரிக்கைகள் நிறைவே றும் வரை வெளியேற மாட்டோம் என அறி வித்த மாற்றுத் திறனாளிகள், அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்திலேயே போராட்டத் தைத் தொடர்ந்தனர். அப்போது, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மாற்றுத் திறனாளிகளை வெளியேற்றி பேருந்து நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் ஆங்காங்கே தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனையும் மீறி பல  மண்டபங்களில் போராட்டம் தொடர்ந்தது. அமைச்சர் பேச்சுவார்த்தை இந்நிலையில், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச்  செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல் ராஜ், டி. ரவீந்திரன், செ. முத்துக்கண்ணன் ஆகியோர் சந்தித்தனர்.  இதனை தொடர்ந்து இரவு 11 மணி  அளவில் சமூகநலத்துறை அமைச்சர்  கீதா ஜீவன், சிபிஎம் தலைவர்கள் முன்னி லையில், ஊனமுற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்புராஜன், சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி, பொருளாளர் சக்ரவர்த்தி உள்ளிட் டோருடன் சுமார் 30 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் ஏற்பு அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மாற்றுத் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலாளர், பிறதுறை அதி காரிகளுடன் பேசி, சில முடிவுகளை மேற் கொண்டுள்ளோம். அதை நேரில் தெரி வித்தோம். நூறுநாள் வேலையில் 8 மணி  நேரப் பணியை ரத்து செய்து மீண்டும் 4  மணி நேர வேலையாக நிர்ணயிக்க வேண்டும்; 2 கி.மீ. தூரத்திற்கு மேல் பணி  வழங்காமல் அருகில் பணி வழங்க வேண்டும் அல்லது வாகன ஏற்பாடு செய்ய வேண்டும்; அனைத்துத்துறை அதி காரிகள் பங்கேற்கும் குறைதீர்ப்புக் கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. அவற்றை ஏற்றுக்கொண் டோம்” என்று தெரிவித்தார். மேலும், “உதவித்தொகை கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் தீர்வு காணப்படும். மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 80  ஆயிரம் பேர் வரை இதில் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைப் பொறுத்தரை, விருப்பம் இல்லாதவர்களுக்கு உரிமைத் தொகையை  ரத்து செய்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதல்வரிடம் தெரிவித்து தீர்வு மாற்றுத்திறனாளியாக உள்ளவர் களின் குடும்பப் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். உதவித்தொகையை வங்கிகளில் நேரடியாக வரவு வைப்பதால் ஏற்படும் சிரமங்களை கூறினர். அதுபற்றி முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனா ளிகளுக்கான உதவித்தொகை குறித்து,, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு  முடிவு செய்வதை ரத்து செய்ய கோரி னார்கள். வயது வரம்பின்றி உதவித் தொகை வழங்க பரிசீலித்து முடிவெடுக்கப் படும். உதவித்தொகை உயர்வு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச் சர் கூறினார். இதனைத்தொடர்ந்து “உதவித்தொகை  உயர்வு தொடர்பாக முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்ப தாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதி களை நம்பி போராட்டத்தை திரும்பப் பெறு கிறோம்” என்று சங்கத்தின் பொதுச்செய லாளர் பா. ஜான்சிராணி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி!

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கோட்டை முற்றுகை போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற போராட்டத்தையடுத்து, அமைச்சர் கீதா ஜீவன்  நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதியளித்துள்ளார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து அமைப்பு களுக்கும், பங்கேற்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. மாற்றுத்திறனாளிகளை சட்ட விரோதமாக கைது செய்து, துன்புறுத்திய காவல்துறையின் நடவடிக்கை களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  மாநிலத் தலைவர் தோ.வில்சன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.