tamilnadu

img

கரூர் மாவட்டத்தில் ஜவுளிப் பொருட்கள் தொழில்நுட்ப பரிசோதனை நிலையம்

கரூர், ஜூலை 2 - கரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  பல்வேறு துறைகளின் சார்பில் கரூர் மாவட் டத்தைச் சேர்ந்த 80,943 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  கரூர் மாவட்டத்திற்குள் ரூ.581.44 கோடி  மதிப்பீட்டில் 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளில் ரூ.28.60 கோடி மதிப்பீட்டில், 95 நிறைவு பெற்ற திட்டங்களை மக்கள் பயன்  பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“ஒவ்வொருவருக்கும் தமது மனசாட்சியே நீதிபதி என்பார்கள். அதன்படி எனது மன சாட்சிக்கு உண்மையாக ஆட்சி நடத்துகிறேன்.  ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவைத் தருகிறது.  மக்களிடம் இருந்து வரும் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற எப்போ தும் இந்த அரசு தயாராக உள்ளது. வீண் விமர்  சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுடைய முகத்தில் தென்படும் மலர்ச்சியும், மகிழ்ச்சி யும்தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்ப தற்கான சாட்சி.  ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சியில் ஆரோக்கியமான போட்டி இருக்க  வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும். கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டத்தைவிட தொழிலில் வளர வேண்டும். கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படு கிற ஜவுளி பொருட்களை வாங்குவதற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் வாடிக்கையா ளர்களுக்கு, ஜவுளி உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு தேவையான மிகப் பெரிய அரங்கம் கரூர் மாவட்டத்தில் அமைக் கப்படும். கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாக கூடிய ஜவுளி பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை நிலையம் (International Advance Testing Lab) கரூரில் அமைக்கப்படும்.

கரூர் மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக் கூடிய வகையில், கரூர் மாநக ராட்சி திருமாநிலையூரில் ரூ.47 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்”.இவ்வாறு அவர் பேசினார்.  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பி னர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பி னர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.