tamilnadu

img

அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டம்

தஞ்சாவூர், டிச. 30- சத்துணவு ஊழியர்கள் உள்ளி ட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்  ஜனவரி 25 அன்று மாவட்டத் தலைநகர் களில் தர்ணா போராட்டத்தை நடத்துவது என்று ஓய்வூதியர் சங்க  மாநிலப் பேரவை தீர்மானித் துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6  ஆவது மாநிலப் பேரவை தஞ்சா வூரில் டிசம்பர் 30 வியாழக்கிழமை யன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.எல். சீதரன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழுத் தலைவர் களப்பிரன் வரவேற்றார். மாநிலப் பேரவையை சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி துவக்கி வைத்தார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக் கம், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளன பொதுச் செயலா ளர் ஸ்ரீகுமார், அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் எஸ். ரெங்க சாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, வேலை அறிக்கையையும், நிதிநிலை அறிக்கையைப் பொருளாளர் என். ஜெயசந்திரனும் பேரவையில் சமர்ப்பித்தார்கள்.

தீர்மானங்கள்

குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறைக் காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளி ட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் சிகிச்சை அனை த்தையும் கட்டணமில்லா சிகிச்சை யாக உத்தரவாதப்படுத்தவேண் டும். கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற செலுத்தியுள்ள கட்டணத்தை முழுமையாக வழங்க வேண்டும். ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மரு த்துவப் பரிசோதனை கட்டணங்கள், தொடர் சிகிச்சையான புற்று நோய், நீரிழிவுநோய், சிறுநீரக நோய் போன்றவற்றிற்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றா லும் அனைத்து செலவுகளையும் காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண் டும்.

சத்துணவு, அங்கன்வாடி, உள்ளாட்சி, பேரூராட்சி அமைப்பு களைச் சேர்ந்த ஊழியர்கள், கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு ஓய்வூதியர்களையும் காப் பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். தமிழக அரசே காப்பீ ட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஆண்டு 30.6.2022இல் நிறை வடைகிறது. இத்திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படும்போது ஓய்வூதி யர் சங்கங்களை அழைத்து கருத்து கேட்ட பின், புதுப்பிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகர் களில்  ஜனவரி 25 அன்று அரை நாள் தர்ணா நடத்துவது என்று பேரவை தீர்மானித்தது. தீர்மானங்களை மாநில நிர்வாகி கள் இளமாறன், குப்பன், இராம மூர்த்தி, குரு. சந்திரசேகரன், ஆறு முகம், மனோகரன், நாதன் ஆகி யோர் பேரவையில் முன்மொழிந் தார்கள். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. கலியமூர்த்தி நன்றி கூறினார். (ந.நி.)